Saturday, February 4, 2012

பதிவுலகில் சாதாரண பதிவர்களுக்கும் பிரச்சினைகள்!!

சாதாரணப் பதிவர்கள் பலருக்கு பதிவுலகம் என்பது தன் சிந்தனைகளை அள்ளிக்கொட்ட கெடச்ச ஒரு நல்ல இடம், ஒரு பொழுதுபோக்கிடம்! அம்புட்டுத்தான்.

இந்தப் பதிவுலக எழுத்தை வச்சு பெரிய க்ரிட்டிக்காகவோ, பெரிய எழுத்தாளனா ஆகனும்னோ, இல்லை நெறையா சம்பாரிக்கனும்னோ, எண்ணமெல்லாம் பொதுவாக இந்த சாதாரணப் பதிவர்களுக்குக் கெடையாது.
தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில், தங்கள் கருத்தை அவங்களுக்குத் தெரிந்த தமிழில் எழுத்துப்பிழை, பொருள்ப் பிழை, எல்லாப் பிழைகளுடனும் எழுதி, ஒரு முறை வாசிச்சுக்கூடப் பார்க்காமல் பதிவுல சொல்லிப்புட்டு, மறக்காமல் திரட்டிக்கு அனுப்பிட்டு, எவனும் படிச்சாப் படிக்கிறாங்க இல்லைனாலும் பரவாயில்லை னு பெரியமனுஷத்தனமா நெனச்சுக்கிட்டு..அதோட ஒதுங்கி போயிடலாம்னுதான் பார்க்கிறாங்க..

ஆனால்..

என்ன ஆனால் னு இழுக்கிற??

ஆனால் அதோட இவர்கள் ஒதுங்கிப் போவதில்லை!

ஏன்??

இங்கேதான் ஒரு சாதாரணப் பதிவரின் மனதின் அடியில் உள்ள "பொதுநோக்கு" அல்லது "பொதுத்தொண்டு", அல்லது "தமிழ்த்தொண்டு" தலை காட்டுது!

புரியல! யாருக்கு?

அதான் மேலே சொன்ன அந்த சாதாரண பதிவர்களுக்கு!!

என்னத்தையோ சும்மா பொழுதுபோக்குக்கு எழுதிட்டு, படிச்சாப் படி இல்லைனா விடுனு போகனும்னு நெனைக்கிற பிரச்சினை-விரும்பாப் பதிவர்களுக்கும் பதிவுலகில், பிரச்சினை வருது!

என்ன பிரச்சினை அவங்களுக்கு?? கொஞ்சம் தெளிவா சொல்லேன்?

* 1) ஏன் பதிவுலகில், இவ்வளவு மட்டமான பதிவுகள், ஒண்ணத்துக்கும் உதவாத பதிவுகள் எல்லாம், மகுடம் சூட்டுது?

* 2) இந்தப் பதிவெல்லாம் எதுக்கு வாசகர் பரிந்துரையில் அதிக மதிப்பெண்கள் பெற்று இடம் பெறுது?

* 3) இந்தக் குப்பையெல்லாம் எதுக்கு சூடான இடுகையா வந்து நிக்கிது?

* 4) அதே நேரத்தில் ஏன் இப்படி ஒரு சில நல்ல தரமான பதிவுகளெல்லாம் வந்ததும் உடனே மறைந்துடுது?

இந்த மாதிரிப் பிரச்சினைகள், கவலைகள், ஆதங்கம், இத்யாதி இத்யாதி, எல்லாம் மேலே சொன்ன "சாதாரண"ப் பதிவர்களுக்கு வந்து விடுது, அப்புறம் திரட்டி நடத்துறவங்களுக்கும் இந்தக் கவலை இருக்கத்தான் செய்யுது.

திரட்டிகள் என்னதான் புதிய சட்டதிட்டங்கள் கொண்டு வந்து மாற்றியமைத்தாலும் இதே "திருப்தியில்லா" நிலைக்குத்தான் பதிவுலகம் கடைசியில் மறுபடியும் மறுபடியும் வந்து நிக்கிது."

"4 வருடத்துக்கு முன்னால நல்லாயிருந்துச்சே?" ஒரு சிலர் நெனைக்கிறாங்க, சொல்ல்லிக்கிறாங்க. ஒத்த சிந்தனையுள்ள பதிவுலக நண்பர்கள் சிலர் தங்களுக்குள் வருத்தத்துடன், ஆதங்கத்துடன் இந்த "அவலநிலை" பத்திப் பேசிக்கிறாங்க, கவலைப் படுறாங்க. ஒர் சிலர், ஒரு பதிவு போட்டும் தன் வருத்தத்தை காட்டுறாங்க!

இதுக்கு என்னதான் மருந்து?

என்னதான் தீர்வு?


இவங்க என்ன செய்யலாம்?

எது சூடாகுது, எது பரிந்துரைக்கப்படுது, எதெல்லாம் மகுடம் சூட்டுது என்பதையெல்லாம் கண்டுக்காம, பேசாமல் தனக்குப் பிடித்த, தனக்கு எதிர்கருத்து சொல்லத்தோணுற பதிவுகளில், விவாதிக்க தோணுகிற பதிவுகளில் போய், தங்கள் கருத்தை சொல்லிப்புட்டு, தன் மதிப்பீட்டின்படி தகுதியில்லா "over-rated" பதிவுகளை கண்டுக்காமல் ஒதுங்கிப் போயிடுறது நல்லது. இப்படிப் போனால், செய்தால், நீங்க ஒரு தரமான பதிவராயிடலாம்!



"இவங்க (நீங்க) எதிர்பார்க்கிற ஒரு உயர் தர பதிவுலக நிலை ஒரு போதும் வரப்போவதில்லை!" என்பதே உண்மை.

எனது புரிதல் என்னனா, எந்தத் திரட்டியும், இதுபோல் "பதிவுலக ஒழுங்கீனத்தை" ஒட்டு மொத்தமாக உடனே ஒழிக்க முடியாது. இதுபோல் ஒழுங்கீனங்கள் நிர்வாகிகளுக்குப் பிடிக்காமல் இருந்தாலும், அதை ஓரளவுக்கு "tolerate" செய்து போக வேண்டிய சூழல்லதான் திரட்டிகளும் உள்ளன. அவர்களால் ஒரு சில பொதுப்படையான மாற்றங்களே செய்ய இயலும்.

திரட்டிகளால் இயலாதது சுதந்திரப் பதிவர்களால் முடியும்!

ஒரு புதுப்பதிவர் (அல்லது அது மாரி நடிக்கிறவர்) ஒருத்தரு, புதிய வலைதளத்தில், பல கமர்சியல்களை போட்டுக்கிட்டு எதுக்கெடுத்தாலும் "அந்த மாதிரி படத்தில் நடிக்க இந்த நடிகைக்கு ஆசையாம்" "ஆபாசப் படம் காட்டும் சின்னத்திரை" னு ஒவ்வொரு பதிவுலயும் தொடர்ந்து, ஆமா, தொடர்ந்து, எழவைக்கூட்டினால், அந்தப் பதிவரைப் பத்தி எந்த ஒரு சாதாரணப் பதிவரும், பொதுநலம் கருதி "ஏன்ப்பா இப்படி செய்ற?" னு ஒரு பதிவைப்போட்டு கண்டிக்கலாம்! அந்த அளவுக்கு தைரியம் இல்லை, வம்பில் மாட்ட இஷ்டமில்லைனா, நீங்க நல்லவனாகவே இருக்கனும்னா, பேசாமல் விட்டுப்புட்டு போயிடுங்கோ!

3 comments:

துரைடேனியல் said...

நீங்க சொல்றது சரிதானுங்கோ. இப்படியே எல்லாரும் இருந்துட்டா பிரச்சினையாவது மண்ணாவது? புரியாமத்தான் இவ்வளவு பிரச்சினையும். அருமையான பகிர்வு. நன்றி சார்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

வருண் said...

நன்றிங்க, துரைடேனியல் & ரத்னவேலு அவர்கள்! :)