Tuesday, February 7, 2012

சாருவுக்கு கெடைக்காத பாராட்டு, கைதட்டு!- நக்கீரன் உபயம்

சாரு! இதென்ன ரஜினிகாந்து- எஸ் ரா விமர்சனக்கூட்டமா?? இல்லைனா எக்ஸைலுக்கு இன்னொரு பேரு ரஜினிகாந்தா?

எக்ஸைல் விமர்சனக்கூட்டத்துல ஏதாவது இலக்கியவாதி எக்ஸைல அப்படிப் பாராட்டினாங்க இப்படி பாராட்டினாங்க, அல்லது இப்படி திட்டினாங்க னு பேசாமல், ரஜினிகாந்த் பற்றி விமர்சனம் எதுக்கு??

எஸ் ரா வுக்கு இயல் விருது கிடைத்ததை பாராட்ட ரஜினி சென்றது பாவம் நம்ம சாருவுக்குப் பிடிக்கலை போலயிருக்கு. பிடிக்கலை சரி, அதுக்காக அதை இப்படியா வெளியே காட்டுறது? ஒரு வேளை எக்ஸைல் விமர்சனக்கூட்டத்தில் ரஜினியைப் பத்தி எதையாவது பேசி, தன் "எக்ஸைல்" மேல் கொஞ்சம் கவனத்தைத் திருப்ப முயற்சியாக்கூட இருக்கலாம்? என்ன எழவாயிருந்தாலும் சாருவுடைய ரஜினிகாந்து விமர்சனம் (வீடியோ) மற்றும் அவர் தளத்தில் வந்துள்ள வயித்தெரிச்சல் கட்டுரைகள் எல்லாமே படு மட்டமாயிருக்கு!

ஏதோ பாபாவுக்கு கதை எழுதிய பழக்கத்தில் "தகுதியில்லாத ரஜினி" போயி இந்த விழாவில் எதையோ பேசி சமாளிச்சு ஒரு வழியா விழா நல்லபடியா முடிஞ்சிருச்சு. இதனால எஸ் ரா ரொம்ப பாப்புளர் ஆவார், அவர் நாவல்கள் நெறையா விற்கும், என்பதெல்லாம் சாத்தியமேயில்லை. இதை, சாரு, ஒரு ஜெண்டில்மேன் போல கண்டுக்காம விட்டுட்டுப் போயிருக்கலாம்.

ஏன் எஸ் ரா மேலே போயி அப்படியொரு பொறாமை இந்தாளுக்கு? எஸ் ராவைப் பார்த்தால் ஜெயமோஹன், ஞாநி போல யாரோடையும் எந்த வம்புக்குப் போற ஆள் மாதிரித் தெரியலை. சாருவோட எக்ஸைல் வெளியீட்டு விழாவுக்கும்தான் வாலி, மதன், ஞாநி எல்லாம் வந்து இருந்தாங்க. சாருவைப் பத்தி அவர் நாவல்கள் பத்தி என்ன சொல்றதுனே தெரியாமல் புகழ்றமாரி எதையோ ஒளறிக் கொட்டிவிட்டு சென்றார்கள். அது காமெடியாக இருந்ததாலோ என்னவோ, அதையெல்லாம் பாத்து எஸ் ரா பொறாமைப் பட்டு எதையும் ஒளறவில்லை, எழுதவில்லை.

இந்த மாதிரி ஒரு விசயத்தைப் போட்டு குறை கண்டுபிடிக்கனுமேனு வலுக்காட்டாயமாக உக்காந்து, மண்டை காய யோசிச்சு, உப்புச் சப்பு இல்லாத ஒரு குப்பை மேடைப்பேச்சைப் பேசி.. ரஜினிக்கு இது தெரியாதா? அது தெரியாதா? னு பத்தி பத்தியா எதுக்கு பேசிக்கிட்டு, எழுதிக்கிட்டு?

இதனால சாரு சாதிச்சது என்ன? என்னை இப்படி ஒரு பதிவு எழுத வச்சதைத்தவிர ஒரு எழவும் இல்லை! இவரோட இந்த அர்த்தமில்லாத பேச்சால் எக்ஸைல் வாங்கனும், படிக்கனும்னு நெனச்சவன்கூட இனிமேல் வாங்க மாட்டான்!

சாருவுடைய இந்தப்பேச்சில் பெரிய பிரச்சினை என்ன வென்றால் இதில் எந்தவிதமான வீரியமும் இல்லை. உப்புச் சப்பு இல்லாமல் பேசியதால் எவனும் கைகூட ஒழுங்காத் தட்டல்ல போல இருக்கு! இந்த வீணாப்போன நக்கீரன் பத்திரிக்கை, சாரு பேச்சையும் ரஜினி பேச்சையும் படு கேவலமாக மிக்ஸ் பண்ணி, ரஜினி வாங்கிய கை தட்டை எல்லாம் ஏதோ சாருக்கு கெடச்ச கைதட்டு மாதிரி (உபயம் செய்து )வீடியோவை எடிட் செய்து ஒரு ஈனப்பொழைப்பு நடத்தியிருக்கிறது!

3 comments:

Avargal Unmaigal said...

மிகச் சரியாக குட்டு வைத்திருக்கீறிர்கள் சாருவுக்கு

வருண் said...

அவர்கள் உண்மைகள்!

வாங்க! :-)

சாருக்கு இதெல்லாம் வலிக்காதுங்க!
தூங்கிறவனை எழுப்பலாம்..

இருந்தாலும், நம்ம சொல்ல வேண்டியதை சொல்லிப்புடுறது நல்லது!

JR Benedict II said...

Soopar baash..