Wednesday, May 23, 2012

அதர்வ வேதம் பற்றி ஜெயமோஹன்!

 வரவர நான் ஜெயமோஹன் ரசிகராகிவிட்டேனானு எனக்கே சந்தேகம் வருது. அவர் தளத்தில் உள்ள ஒரு வேதம் சம்மந்தப்பட்ட பதிவை வாசிக்க நேர்ந்தது. இதுல என்ன சொல்ல வர்ரார்னா, 

வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?


***வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது.***

அதாவது, வெள்ளைக்காரன் வந்துதான் எல்லா சாதி கலகத்தையும் நமக்குள்ள உண்டாக்கிவிட்டுட்டான். வேதங்கள் பிராமணர் மற்றும் உயர் சாதியினர் தவிர மற்றவர்களிடம் இருந்து விலக்கப்பட்டது என்பது பொய் என்கிறார். சரி, அப்படியே எடுத்துக்குவோம்..

கீழே கொடுக்கப்பட்டுள்ளதை ஒரு நிகழ்வை (கதை?)வாசிங்க!!!


இன்னொரு வேடிக்கை உண்டு அந்த அதர்வ வேதச் சடங்கை ஒரு பிராமணன் தவறிப்போய் கேட்டுவிட்டால் அவனுக்கு தீட்டும் விலக்கும் வந்துவிடும். கேரளத்தில் உள்ள வலியதளி என்ற கோயிலைப்பற்றிய கதை உதாரணம். அங்கே நதிக்கரையில் இருந்த இரு சூலாயுதங்களை இரு நம்பூதிரி சிறுவர்கள் பூசை செய்து வந்தார்கள். இளையவன் அப்பகுதியில் உள்ள ஆசாரிகள் செய்யும் ஒரு அதர்வவேதச் சடங்கை ஒருமுறை கவனித்து மந்திரத்தை மனனம் செய்துகொண்டான்

ஒருநாள் பூசை செய்யும்போது ஒரு சூலம் பயங்கரமாக ஆடியது. எந்த மந்திரத்தாலும் ஆட்டத்தை நிறுத்தமுடியவில்லை. இளையவன் ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்த்ரீக விதிப்படி அதை உயிர்ப்பலியாக உருவகித்து அந்த சூலத்தில் அடித்து பிளந்தான்.ஆட்டம் நின்றது

ஆனால் அவனுக்கு எப்படி அதர்வம் தெரியும் என்று நம்பூதிரி சபை விசாரித்து கண்டுபிடித்தது. அந்த இளையநம்பூதிரியும் அவன் வம்சத்தில் வருபவர்களும் நிரந்தரமாக சாதிவிலக்கு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒரு உபசாதியாக நீடித்தார்கள். கேரளத்தின் உயிர்ப்பலி இருந்த கோயில்களில் தாந்த்ரீக பூசைகள் செய்பவர்கள் அவர்களே. அவர்கள் இளையது என அழைக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் வேதங்கள் உட்பட எந்த ஞானமும் துறவிகளுக்கு விலக்கப்படவில்லை. ரிஷிமூலம் பார்க்கப்படலாகாது என்ற நெறி என்றும் இருந்தது. தீண்டப்படாத சாதியைச்சேந்த நாராயண குரு துறவு வாழ்க்கையில் வேதவேதாங்கங்களை ஐயம்திரிபறக் கற்றார் என்பது நம் முன் உள்ள வரலாறு.

வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது. இந்தியாவெங்கும் உள்ள ஆசாரங்கள் சடங்குகளை ஆரய்ந்து நம் வரலாற்றை நாமே எழுதிக்கொள்ளமுடியும். அப்போது பதினெட்டாம் நூற்றாண்டில் அன்றைய குறைவான தகவல்களுடன் ஐரோப்ப்பியர் உருவாக்கிக்கொண்ட பல முன்முடிவுகள் உடையும்.

சரி என்ன விசயம்னு பார்ப்போம்!

அதாவது சூலம் ஆடுச்சாம்.  எந்த மந்திரம் சொல்லும்போதும் சூல ஆட்டம் நிற்கவில்லையாம்! உடனே அந்த "இளையவன்" ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்ரீக விதிப்படி உயிர்பலியாக உருவகித்து, அந்த சூலத்தில் அடித்து பிளந்ததும். ஆடிக்கிட்டு இருந்த சூலம், ஆடாமல் (உயிர்பலி கெடச்சதும்) நின்னுடுச்சாம்!!!

நெஜம்மாவே இது ஒரு உண்மையான நிகழ்வா? அப்படினா.. அந்த அதர்வமந்திரம் அந்த சூல ஆட்டத்தை நிறுத்திப்புடுச்சுனு எல்லாரும் நம்புறாகளா?

இல்லைனா இது சும்மா ஒரு கதையா??

இது நெஜம்மாவே நடந்த ஒரு நிகழ்வென்றால், என்னை இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னால்.. 

ஏதோ நிலநடுக்கத்தில் சூலம் ஆடியிருக்கலாம். பல மந்திரங்கள் சொல்லும்போது, அந்த நில நடுக்கம் எதார்த்தமாக நிற்கவில்ல! அப்புறம், இந்த இளையவர், அதர்வமந்திரம் சொல்லி "தேங்கா உயிர்பலி" கொடுத்த போது எதார்த்தமாக அந்த நிலநடுக்கும் நின்றுவிட்டது!

இதப்போயி, அந்த இளையவரின் அதர்வ மந்திர சக்திதான் நிறுத்திப்புடுச்சுனு சொல்வதெல்லாம் அறியாமை இல்லையா?!

25 comments:

Jayadev Das said...

\\ஏதோ நிலநடுக்கத்தில் சூலம் ஆடியிருக்கலாம். பல மந்திரங்கள் சொல்லும்போது, அந்த நில நடுக்கம் எதார்த்தமாக நிற்கவில்ல! அப்புறம், இந்த இளையவர், அதர்வமந்திரம் சொல்லி "தேங்கா உயிர்பலி" கொடுத்த போது எதார்த்தமாக அந்த நிலநடுக்கும் நின்றுவிட்டது!\\ LOL.

Jayadev Das said...

உங்களுக்கு இயற்பியல்ன்னா புடிக்குமா? அதப் பத்தியும் பதிவு போடுங்களேன்!! படிக்கலாம்.

வருண் said...

வாங்க ஜெயவேல்!

நீங்க என்னை மாரி இல்லை. அதாவது இறைவன்/மத/ஸ்பிரிச்சுவல் நம்பிக்கை உள்ளவர். உங்க நம்பிக்கையை நான் மதிக்கனும்.

நீங்க உண்மையிலேயே அந்த இளையவரின் தேங்காயும், அதர்வ மந்திரமும் தான் இதை நிறுத்துச்சுனு நம்புறீகளா?

அப்படித்தான் போல! :( I wish I could do the same but அதெல்லாம் என் மரமண்டைக்கு சாத்தியமே இல்லைங்க!

நான் அவரைப் பார்த்து சிரிக்கிறேன்..
நீங்க என்னைப் பார்த்து சிரிக்கிறீங்க!! சிரிப்புத் தொடர் தொடருதுங்க..

Jayadev Das said...

அடப் பாவிங்களா, சிரிச்சா நம்பவில்லைன்னு அர்த்தமா....!! ஹா...ஹா...ஹா.... நீங்க சொல்லியிருக்கும் விதம் நல்லா தமாஷா இருந்தது சிரிச்சேன்.

Jayadev Das said...

\\நீங்க என்னை மாரி இல்லை. அதாவது இறைவன்/மத/ஸ்பிரிச்சுவல் நம்பிக்கை உள்ளவர். உங்க நம்பிக்கையை நான் மதிக்கனும்.\\ யோவ்..... இதையெல்லாம் நீ எப்படிய்யா கண்டு புடிச்சே..........!! [என் பெயரை கண்டு புடிச்ச மாதிரியே!!]

Jayadev Das said...

உங்க முந்தைய ஜெய மோகன் பதிவு பார்த்தேன்............ ஐயோ சாமின்னு ஓடி வந்திட்டேன். [விளங்கல.......ஹி...ஹி...ஹி....]. பின்னூட்டத்துல ஒருத்தன் வெளக்கெண்ணெய் ........... தாங்க முடியலைடா சாமி...........

வருண் said...

***Jayadev Das said...

அடப் பாவிங்களா, சிரிச்சா நம்பவில்லைன்னு அர்த்தமா....!! ஹா...ஹா...ஹா.... நீங்க சொல்லியிருக்கும் விதம் நல்லா தமாஷா இருந்தது சிரிச்சேன்.

23 May 2012 11:25 AM**

ஓ அந்தமாரிச் சிரிப்பா! :)

வருண் said...

***Jayadev Das said...

\\நீங்க என்னை மாரி இல்லை. அதாவது இறைவன்/மத/ஸ்பிரிச்சுவல் நம்பிக்கை உள்ளவர். உங்க நம்பிக்கையை நான் மதிக்கனும்.\\ யோவ்..... இதையெல்லாம் நீ எப்படிய்யா கண்டு புடிச்சே..........!! [என் பெயரை கண்டு புடிச்ச மாதிரியே!!]***

நமக்கு வயித்துபொழைப்புக்கு செய்ற தொழிலே ஆராய்ச்சிதானுங்கோ! ஆனா, நம்ம ஆராச்சி எல்லாமே சரியான விடையத் தருவதில்லை. ஆனா தவறான விடைக்கும், விடை தெரிந்த பொறகு சரியான விளக்கம் கொடுத்துப்புடுவோம்ங்க! இந்தப் பின்னூட்டத்தில் நான் சொல்வதெல்லாம் உண்மைங்க!

"என்னத்த ஆராய்ச்சி பண்ணி நீ பாடையிலே போனயோ!" னு நம்ம தள வாசகர்களெல்லாம் நமட்டு சிரிப்பு சிரிக்கிறமாரி இருக்கு இப்போ! :))

வருண் said...

***Jayadev Das said...

உங்க முந்தைய ஜெய மோகன் பதிவு பார்த்தேன்............ ஐயோ சாமின்னு ஓடி வந்திட்டேன். [விளங்கல.......ஹி...ஹி...ஹி....]. பின்னூட்டத்துல ஒருத்தன் வெளக்கெண்ணெய் ........... தாங்க முடியலைடா சாமி...........***

ஒவ்வொரு சம்யம் அப்படித்தான் நடக்குது.

நம்ம தகுதியை (ஜெயமோஹனை விமர்சிக்க இருக்க) எல்லாரும் தவறா எடைபோட்டுப் புடுறாங்க, என்ன செய்றது?

செயமோஹன் பக்தர் ராஜேசுனு ஒருத்தரு என்னை, அவரை ரொம்ப திட்ட வச்சுப்புட்டாரு!

என்னோட பயோடேட்டாவை பின்னூட்டத்தில் போட்டிறலாமானு யோசிச்சேன். அப்புறம் விட்டுப்புட்டேன்! :)

Jayadev Das said...

\\என்னோட பயோடேட்டாவை பின்னூட்டத்தில் போட்டிறலாமானு யோசிச்சேன். அப்புறம் விட்டுப்புட்டேன்! :) \\அதுல அந்த ஆளு தெரிஞ்சுக்கணும்னு நீங்க நினைச்சதை மட்டும் கொஞ்சம் சூசகமா சொல்லுங்களேன், இன்டரஸ்டிங் ஆக இருக்கும் போலிருக்கே!!

Jayadev Das said...

\\
"என்னத்த ஆராய்ச்சி பண்ணி நீ பாடையிலே போனயோ!" னு நம்ம தள வாசகர்களெல்லாம் நமட்டு சிரிப்பு சிரிக்கிறமாரி இருக்கு இப்போ! :))\\ அடேங்கப்பா............!! ம்ம்....... அது சரி என்னோட பிளாக்கு பிரபலமாயிட்டா என்ன பண்றதுன்னு நீங்க கண்ணும் கருத்துமா செயல் படுறீங்க போல இருக்கே, ஏன்.................!!

Rajesh kumar said...

// என்னோட பயோடேட்டாவை பின்னூட்டத்தில் போட்டிறலாமானு யோசிச்சேன். அப்புறம் விட்டுப்புட்டேன்! :) //

எனக்கு சந்தானத்தோட ஒரு டயலாக் ஞாபகம் வருது.
டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்கள விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.
வருண் சார் ..!
நீங்க ஐன்ஸ்டீன விட பெரிய ஆராச்சியாளரா இருக்கலாம். என்ன பிரயோஜனம்? உங்க "attitude" சரியில்லையே ? போனவாட்டி "When it is high time" னு ஒருத்தர் கிட்ட செம்ம பல்பு வாங்கின உடனே அவரையும் "Moron" " mental" அப்படீன்னு திட்டினீங்க.அப்புறம் கோபம் தணிஞ்ச உடனே திட்டினத எல்லாம் கமன்ட்ல இருந்து மாத்திட்டீங்க.
I think "when its high time's answers were in such hifi language, you just cant accept the fact his command in Language is better than yours. You went mad and yelled at him saying " Moron" and "mental" repeatedly. At that point you really looked like a Joker.

you are such a pathetic sick creature. You may be a great scholar , a great scientist, but its a simple truth unless you have respect for others, none of your
so called pride what you have now will help you.

It may be bitter to hear but it is the truth. You will realize some day. I really pity the people who are with you.They should be really worshiped for being with you.
Kanna you know T Rajendar? He is ultimately talented but due to his attitude his mouth he is one of the biggest jokers of all times.
There is not much difference between you and him.
In புற நானூறு, one of the greatest ancient Tamil literature there is a line in a Poem
"பெரியோரை வியத்தல் இலமே ,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"

OK what are you waiting for? start yelling your "Moron" again... haahhahaha.
I know you will delete this comment as soon as you read this.. but read this and give a second thought about your attitude.
Byeeeeeee

வருண் said...

என்ன ராஜேசு, அந்த சூலம் ஆடியது, அதை மந்திரம் நிறுத்தியது பத்தி யெல்லாம் ஒண்ணுமே சொல்லல.

You want me to leave this response of yours as such? That can be done, dont worry! :)

Jayadev Das said...

\\.If you cannot handle the argument let me handle it in a diplomatic way but the ball is on your court.It is wrong to abuse when somebody comes to your door steps with a friendly smile.\\

வருண் என்னமோ தெரியல, எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்துப் போய் விட்டது. உங்கள் பிளாக்குக்கு பின்னூட்டம் போடுகிறார்கள் என்றால் அது மகிழ்ச்சி தானே!! எதிர் கருத்து என்றால் அதை எதிர்த்து நீங்கள் சொல்வது எப்படி சரி என்று ஆணித் தரமாக மறுத்து பின்னூட்டம் போடுங்களேன்!! ஒரு வேலை அவர்கள் தரக்குறைவாக எழுதினால், அதை லாவகமாக சமாளித்து உங்கள் பதிலையும் அதற்க்கு மாறாக மரியாதையான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி போட்டால், படிப்பவர்கள் யார் சரியாக சொல்கிறார்கள் என்று முடிவு செய்து கொள்வார்கள், நீங்கள் உணர்ச்சி வசப் பட வேண்டிய அவசியமே இல்லை.

இன்னொன்று, ஆங்கிலம் தெரியாத வரையில் தான் ஒரு அதிசயமாகத் தோன்றியது, ஓரளவுக்கு பரிச்சயம் ஆன பின்னர் அதுவும் தெலுங்கு, கன்னடம் மாதிரி இன்னொரு மொழி என்றாகி விட்டது, அதில் பேசுவதோ எழுதுவதோ தற்போது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அதை நினைத்து பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள் என்றால் [அது யாராக இருந்தாலும் சரி] இன்னமும் அந்த மொழியை ஒரு டீசன்ட் அளவுக்குக் கூட கற்றுக் கொள்ள வில்லை என்று தான் அர்த்தம்.

எதிர் பின்னூட்டம் வந்தால் இனி அல்வா மாதிரி, விடாதீங்க வருண், போட்டுத் தாக்குங்க. வார்த்தை மீறல்கள் மட்டும் வேண்டாம். இது நட்பு ரீதியான வேண்டுகோள் மட்டுமே!!

Rajesh kumar said...

// You want me to leave this response of yours as such? That can be done, dont worry! :)//

great man.. you didn't loose your temper this time :-)

//ஆங்கிலம் தெரியாத வரையில் தான் ஒரு அதிசயமாகத் தோன்றியது, ஓரளவுக்கு பரிச்சயம் ஆன பின்னர் அதுவும் தெலுங்கு, கன்னடம் மாதிரி இன்னொரு மொழி என்றாகி விட்டது, அதில் பேசுவதோ எழுதுவதோ தற்போது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அதை நினைத்து பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள் என்றால் [அது யாராக இருந்தாலும் சரி] இன்னமும் அந்த மொழியை ஒரு டீசன்ட் அளவுக்குக் கூட கற்றுக் கொள்ள வில்லை என்று தான் அர்த்தம்.//

Jeyadev..
now a days its not a big deal to write some ornamental english.. you got hell a lot of resources from web..

also I never worried about my english since it ain't my native tongue..

be cool..

Jayadev Das said...

அன்பின் ராஜேஷ், தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். மெக்கானிகல் எஞ்சினியரிங் துறையைப் பற்றி ஏழெட்டு பதிவுகள் போட்டிருந்தீர்கள். படிக்கலாம் என்றிருக்கிறேன்.

\\now a days its not a big deal to write some ornamental english.. you got hell a lot of resources from web..\\ இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்களில் 95% மேலானவர்கள் பேசும் ஆங்கிலம் ஐரோப்பியருக்கோ, அமெரிக்கருக்கோ புரிவதே இல்லையாம். மேலும் native speakers of English நீங்கள் இருவருமே பின்னூட்டங்களில் பயன்படுத்தியிருக்கும் high sounding வார்த்தைகளைப் பயன் படுத்துவதே இல்லையாம். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் இன்றைக்கு நம்மூர் ஐந்தாம் வகுப்பு குழந்தை களுக்கே தெரியும். [தொழில் ரீதியாக பயன்படுத்தப் படும் technical words இதில் சேராது!!]. நாம் பேசும் வார்த்தைகளையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் அவர்கள் பார்த்தால் தனியாகப் போய் உட்கார்ந்து கொண்டு சிரிப்பார்கள். ஹா........ ஹா........ ஹா........ ஹா........

வருண் said...

***Jayadev Das said...

\\.If you cannot handle the argument let me handle it in a diplomatic way but the ball is on your court.It is wrong to abuse when somebody comes to your door steps with a friendly smile.\\

வருண் என்னமோ தெரியல, எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்துப் போய் விட்டது***

தத்துவம்/உண்மை என்பது யாரு சொன்னாலும் நல்லாத்தான் இருக்கும்.

ஆனால், பதிவுலகம் ரொம்ப காம்ப்ளெக்ஸ் உலகம்ங்க.

நண்பர் ராஜேசுவுடைய முதல் பின்னூட்டம் எதுனா,

***Rajesh kumar said...

//இந்த மாதிரி படிப்பறிவில்லாத (அறிவிய்லனா என்னனு தெரியாத) பொதுநல"மத"வாதிகள் கொஞ்சம் dangerous elements! கொஞ்சம் தட்டி வைக்கலைனு வச்சுக்கோங்க, தன்னை இன்னும் பெரிய மேதைனு நெனச்சுக்கிட்டு இன்னும் முட்டாளாகிக்கிட்டே போவானுக!//

என்னது ஜெயமோகன தட்டி வைக்கிறீங்களா? ஹஹஹாஹ் செம்ம சிரிப்பு வருது !! அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும் பாஸ் ..சும்மா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு ரெண்டு பதிவு போட்டுட்டா பெரிய தகுதி வந்திடுமா? உங்களுக்கு அவர் எழுதுன கருத்து ஒண்ணுமே மண்டைல ஏறல. அவர் சொல்றது இந்து மதத்தோட மரபுகள் பத்தி. ஆசாரங்கள் பத்தி இல்ல. சும்மா ஜெயமொகன்னு தலைப்பு வச்சா ஹிட்ஸ் கிடைக்கும். அது மட்டும்தான் உங்க நோக்கம்.போங்க பாஸ் ..சும்மா ஒரு நாலு சினிமா விமர்சனம் எழுதுறதோட நிறுத்திக்கோங்க. ஜெயமோகன தட்டி வைக்கிரீங்கலாமே .. காமெடி பண்ணாதீங்க.
11 May 2012 7:17 PM ***

ஜெயமோஹனை நான் அவர் தளத்தில் விமர்சிக்க முடியாது! அது ராஜேஷுக்கு தெரியுமா என்னனு தெரியலை.

அதேபோல், இவரு இந்ததளத்துக்கு வந்து, "உன் தகுதி இதுதான்" "நீயெல்லாம் ஜெயமோஹனை விமர்சிக்க தகுதி அற்றவன்" னு (இங்கே வந்து ) சொல்லிப்புட்டு, அவருக்கு சகல மரியாதையும் எதிர்பார்த்தார்னா அது அவரு தப்பு!

தத்துவம் பேச் தெரிந்த அவருக்கு, என் தளத்தில் வந்து "நீயெல்லாம் என்ன பருப்பா"னு கேட்கமுடியாது. கேட்டால் அதன் விளைவுகள் விபரீதமாகும்னு தெரியலை. என்ன பண்ணுறது?

நம்ம யாருக்கு குறைந்தவங்கனு நெனைக்கிறது தப்பு! அப்படியிருக்கும்போது அதுபோல் பிதற்றும் ஒருவரை மரியாதையாக நடத்துனோம்னா, நம்ம நடிக்கிறோம்னு அர்த்தம். அவருக்கு புரிய வைக்கனும். நீங்க வந்து ஜெயமோஹன் தளத்தில் இல்லை. இந்தத்தள்த்தை நடத்துறவரை இப்படிப் பேசினால் உங்களுக்கு மரியாதை கெடைக்காதுனு.

இப்படித்தான் வலையுலகில் விவாதம் தடம் புரண்டு ஓடும்.

I am not going to agree that I am inferior to anybody. So, I have to counter him as he insulted me and my belief. :)

-------------

சூலம் ஆடுது அதை மந்திரம் நிறுத்துதுனு பேசுற ஜெயமோஹன் இயற்பியலை எல்லாம் விமர்சிக்கிறது ரொம்ப அதிகம்ங்க! :)))

வருண் said...

***Rajesh kumar said...

// You want me to leave this response of yours as such? That can be done, dont worry! :)//

great man.. you didn't loose your temper this time :-)***

நீங்க இந்த தளத்தில் அடியெடுத்து வைத்து இட்ட முதல் பின்னூட்டம் இதுபோல் இல்லை.

ஜெயமோஹன் கடவுள், நீ சாக்கடைனு என் தளத்தில் வந்து சொன்னீங்க.

ஒரு தாழ்த்தப்பட்டவன் ஆச்சாரப் பார்ப்பான் வீட்டுபோனால் அது அவன் தப்பு.

அதே ஆச்சாரப் பார்ப்பான் தாழ்த்தப்பட்டவன் வீட்டுக்குள்ள வந்து, "நீ மட்டமானவன்"ன் உ சொன்னால், அது பார்ப்பான் தப்பு!

மறுபடியும் உங்க்கிட்ட சத்தமா சொல்லுறேன், "நான் யாரைவிடவும் குறைந்தவன்"னு நான் நம்பவில்லை. அப்படி நம்புறவங்கள பத்தி எனக்குக் கவலை இல்லை. ஆனால் என்னிடம் வந்து என் தளத்தில் "உனக்கு என்ன தகுதி இரூ?"னு கேட்டால் அதை அனுமதிக்கமுடியாது. நீங்க உங்க தளத்தில் இல்லை ஜெயமோஹன் தளத்தில் அதை செய்யலாம். But not here. YOu need to understand that. If you dont understand what I am saying, GO and READ your first response in this blog! Take care!

Rajesh kumar said...

ஐயோ சாமி .. அந்த பின்னூட்டத்த பத்தி முனைவர் பரமசிவம் னு ஒருத்தர் கிட்ட போதுமான அளவுக்கு வாதாடியாசு. இன்னொருவாட்டி போய் படிங்க. நான் சொல்ல வந்தது புரியும்.

//ஜெயமோஹன் கடவுள், நீ சாக்கடைனு என் தளத்தில் வந்து சொன்னீங்க.

ஒரு தாழ்த்தப்பட்டவன் ஆச்சாரப் பார்ப்பான் வீட்டுபோனால் அது அவன் தப்பு.

அதே ஆச்சாரப் பார்ப்பான் தாழ்த்தப்பட்டவன் வீட்டுக்குள்ள வந்து, "நீ மட்டமானவன்"ன் உ சொன்னால், அது பார்ப்பான் தப்பு!//

ஹலோ உங்க லாஜிக் சகிக்கல..!
நான் ஜெயமோகன் கடவுள் னு எப்பவுமே சொல்லல.

கடைசி வரைக்கும் நீங்க புரிஞ்சுக்க போறதில்ல.அப்படியே இருக்கட்டும்

Rajesh kumar said...

jeyadev

// இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்களில் 95% மேலானவர்கள் பேசும் ஆங்கிலம் ஐரோப்பியருக்கோ, அமெரிக்கருக்கோ புரிவதே இல்லையாம். மேலும் native speakers of English நீங்கள் இருவருமே பின்னூட்டங்களில் பயன்படுத்தியிருக்கும் high sounding வார்த்தைகளைப் பயன் படுத்துவதே இல்லையாம். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் இன்றைக்கு நம்மூர் ஐந்தாம் வகுப்பு குழந்தை களுக்கே தெரியும்//

நீங்க சொல்றது ரொம்ப சரி. ஆனா நான் ஒண்ணும் high sounding வார்த்தைகளை பயன்படுத்தவே இல்லை. எனக்கு அவ்வளவா தெரியவும் தெரியாது.
இப்போ ஒரு project காக US ல இருக்கேன். இன்னும் ரொம்ப அடிப்படை ஆங்கில வார்த்தைகள்தான் பேசுறேன். என்னோட உச்சரிப்பை புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டப் பட்டாங்க. ஆனா இப்போ பரவா இல்லை. I am just managing the scene.

Jayadev Das said...

\\இப்போ ஒரு project காக US ல இருக்கேன். \\ இந்த மாதிரி ஒருத்தர் வாசகராக கிடைப்பதே பெருமைப் பட வேண்டிய விஷயம். நான் பிளாக் ஆரம்பிச்சா சொல்றேன், நீங்க வந்து கழுதைன்னு திட்டிட்டு போனாலும் எனக்கு மகிழ்ச்சியே!!

Rajesh kumar said...

//நான் பிளாக் ஆரம்பிச்சா சொல்றேன், நீங்க வந்து கழுதைன்னு திட்டிட்டு போனாலும் எனக்கு மகிழ்ச்சியே!!//

ஜெயதேவ் .. சும்மா கிண்டல் பண்ணாதீங்க .. ஹஹஹா .. இங்கே நான் ஒரு சாதாரண தினக்கூலி வேலையாள் ..அவ்ளோதான்... அப்புறம் ஒரு விஷயம்.. நான் யாரையும் திட்டினதில்லை .. என்னோட பின்னூட்டத்தை புரிஞ்சுக்காம திட்டினதா வருண் நினைசிட்டிருக்கார்.

Rajesh kumar said...

வருண் ஒரு கடைசி விளக்கம்.
சயின்ஸ் பத்தி ஜெயமோகன் கருத்து சொன்னார்னு அவருக்கு என்ன தகுதி இருக்குதுன்னு குதிச்சீங்களே அதே தார்மீக கோபம் ஜெயமோகன் பத்தி விமர்சனம் பண்ற உங்க மேல எனக்கும் வந்ததுல என்ன தப்பு ? அவராவது 30-35 வருஷம் தத்துவங்கள் , பலதுறைகளில் ஒப்பீடுகள் செய்யிறவரா இருக்கார். அந்த அடிப்படைல அவர் அந்த பதிவை போட்டிருந்தார்.
நீங்க உங்க ஆராய்ச்சி , அறிவியல் துறைல சிறந்தவர் அப்பிடீங்கற விஷயத்தை இதுவரைக்கும் வெளிக்காட்டிக்கல.
திடுதிப்புன்னு வந்து ஜெயமோகன் ஒரு மரமண்டை அப்பிடீன்னு திட்டினா என்னை மாதிரி ஒரு நாலு பேரு அட்லீஸ்ட் ஒருத்தனாவது கேள்வி கேட்பான்.

உடனே பண்டாரம் பரதேசி முட்டாள் னு இஷ்டத்துக்கு திட்ட வேண்டியது. அதைவிட தரக்குறைவா திட்ட வேண்டியது ? இது ஒரு பொதுவெளி. இங்கே உங்களுடைய தகுதிதான் நீங்கள் சொல்லும் கருத்துகளுக்கு வலு சேர்க்கும். சும்மா கோபத்துல திட்டினா நம்ம ரெண்டு பேர் மாதிரி சண்டைதான் போடணும்.

வருண் said...

Rajesh: உங்களுக்கு என்ன சொல்லனுமோ அதை நிச்சயம் சொல்லுங்க. அதை நான் அனுமதிக்கனும் அதுதான் பேச்சுச் சுதந்திரம்.

ஜெயமோஹனை நீங்க மதித்து மரியாதை கொடுங்க. நான் அதற்கு இடையில் வரவில்லை.

ஆனால்...

ஒரு சூலம் ஆடுச்சு. அதை மந்திரம் நிறுத்திப்புடுச்சுங்கிற மாதிரி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் (ஜெயமோஹன்) மேலெல்லாம் எனக்கு ஒரு போதும் மரியாதை எல்லாம் வராது.இதை நீங்க புரிஞ்சுக்கவே போறதில்லை. பரவாயில்லை!

I talk to Professors who are in seventies (much older than JM) about religious issues. They were brought up as Christians (இளமை காலத்தில்).

When I ask them (இன்னைக்கு), "Are you going to church, Prof?. The answer I get is, "NO, I am not a BELIEVER, Varun. I never go to church (கிருஸ்துமஸ்க்கு கூட) as I am not a believer. Only such kind of people I am familiar with in my day to day life. இது என் வாழ்க்கை பத்தி சொல்றேன். I like them and respect them of course. Because they are my kind.

நீங்க..You like JM because he may be your kind.

We (you and I) need to go in our paths (they are different) and we need to agree to disagree on issues like "how great JM is", and move on!

Take it easy, buddy!

Deva said...

atarvam padichittu munnor chonna muraiyil payirchi panniyapin athai patti pesuvathu than azhagu.