Thursday, May 31, 2012

திருமண வியாபாரம்- நஷ்டமடைய விருப்பமில்லா திவ்யா!

விஜய், திவ்யா இருவருக்கும் நடக்கப்போறது ஒரு சும்மா கல்யாணம்! அப்படினா? அது ஒரு காதல் கல்யாணமும்  இல்லை! பெற்றோர்களால் நிச்சயக்கப் பட்ட கல்யாணமும் இல்லை! ரெண்டு பேரும் அழகு, படிப்பு, வேலை எல்லாவற்றிலுமே ஒருவருக்கு ஒருவர் தகுதியானவராக  இருந்தாங்க. அதனால  ஒரு வழியா, ஒரு வாழ்க்கைத் துணை வேணுமேனு  ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுறதா முடிவு பண்ணிக்கிட்டாங்க.

கல்யாணத்துக்கு முன்னாலே ஒரு சில விசயங்களை தெளிவாகப் பேசிக்குவோம் னு திவ்யா ஒரு முடிவுக்கு வந்து,  இதைப்பற்றிப் பேசுவதெற்கென்றே இன்று தனிமையில் விஜயை சந்தித்தாள்.

"திவ்யா! உனக்கு என்னென்ன சந்தேகமோ, அதையெல்லாம் தெளிவா கேட்டுக்கோ. உன் எதிர்பார்ப்பை தெளிவா சொல்லிடு! நமக்குள்ள பின்னால எந்தவிதமான பிரச்சினையும் வரக்கூடாது!" என்றான் விஜய்.

"சரி, கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி செய்யப்போறோம்?

"என்ன சொல்ற?"

"அது இல்லை.. நீங்களும் கை நெறையா சம்பாரிக்கிறீங்க? நானும் உங்களுக்கு சமமா சம்பாரிக்கிறேன்.  ரெண்டு பேரும் சேர்ந்து பாங்க் அக்கவுண்ட் வச்சுக்குவோமா? இல்லைனா, தனித் தனியா?"

"உன் அக்கவுண்ட் தனியா வச்சுக்கோ! நான் தனியா வச்சுக்கிறேன். அப்போத்தான் பிரச்சினை வராது."

"அப்போ பில்ஸ், ஹவுஸ் பேமெண்ட், இதெல்லாம்?"

"எல்லாத்தையும் பாதி பாதியா பிரிச்சு ஷேர் பண்ணிக்குவோம்! "

"அப்புறம்.."

"மற்றதெல்லாம் உன் இஷ்டப்படி உன் பணத்தை நீயும், என் பணத்தை, என் இஷ்டப்படி  நானும் செலவழிச்சுக்குவோம். சரியா? நம்ம ரெண்டு பேரும் ரூம் மேட் மாதிரி? பொதுவான குடும்ப விசயத்தில் கவனமாக எல்லா செலவுகளையும் சரி சமமா பிரிச்சுக்குவோம்?"

"ரூம் மேட் மாரியா!"

"இல்லை கணவன் - மனைவினு ஒருத்தர் பணத்தை இன்னொருவர் உரிமையோட எடுத்துக்கக் கூடாது. இல்லையா?"

"ஆமா, அப்படிப் பிரித்துவிட்டால்தான் தொல்லை இல்லாமல் இருக்கும்."

"சரி, பிள்ளை எதுவும் பெத்துக்கப் போறோமா? இல்லையா?"

"இதென்ன கேள்வி? ஆமா."

"பொறக்கிற பிள்ளைக்கு ஆகிற செலவில் பாதிப் பாதியா?"

"ஆமா, குழந்தைக்கு ஆகிற மாதச் செலவில் சரியாப் பிரிச்சுக்குவோம்."

"நல்லது. அப்புறம்.. சப்போஸ் உனக்கு ஏதாவது குழந்தை பெற்றுக்க முடியலை. இல்லைனா எனக்கு குழந்தை பெற்றுத்தர முடியலை..செக்ஸுவல் பிரச்சினையை சொல்லல. இன்ஃப்ரெட்டிலிட்டி.."

"இதையெல்லாம் நான் யோசிக்கலையே? நமக்கு ஏன் அப்படி பிரச்சினை எல்லாம் வருது?"

"ஏன் வராது? யாருக்கு வேணா வரலாம். அப்படி ஒரு நிலையில் விவாகரத்து பண்ணிக்குவோமா?"

"என்ன விஜய், கல்யாணம் பத்தி பேசும்போது?"

"இல்லை, ரெண்டு பேரும் நஷ்டப் பட்டுறக்கூடாது இல்லையா? அதான் சொல்றேன். நாளைக்கு ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லிக்கிட்டு அசிங்கமா.."

"இதைப் பத்தி அப்புறம் யோசிக்கலாமே?"

"சரி, அப்புறம் இந்த செக்ஸ்?"

"அதுக்கென்ன?"

"இல்ல, ஒரு நாள் உனக்கு மூடே இல்லைனு வச்சுக்கோ. எனக்கு ரொம்ப மூடாயிருக்கு. அன்னைக்கு நீ செய்ற "உதவி"க்கு  உனக்கு நான் "பே" பண்ணனுமா?"

" 'பே' பண்ணனுமா? இதெல்லாம் அதிகமா இல்லையா?"

"காசா இல்லை..இல்ல உனக்கு மூடில்லாதபோது எதுக்கு வீணா உன்னை கஷ்டப் படுத்த? நீ எதுக்கு தியாகம் பண்ணனும்? எனக்கு உன்னை அப்யூஸ் பண்றமாதிரி தோனும்..எதுக்கு தியாகம்? இல்லை ஏதாவது கிஃப்ட் வாங்கி வந்து தரவா? "

"தியாகம்லாம் இல்லை.."

"சரி, அன்னைக்கு உன்னை கஷ்டப்படுத்தாமல். நான் ஏதாவது "கால் கேர்ல்" ட்ட போயிக்கவா?"

"எதுக்கு உங்க காசை விரயம் பண்ணுறீங்க?"

"அப்போ யாராவது ஹார்ணியா இருக்க சிங்கிளை கூப்பிட்டுக்கவா? நீயும் அது மாதிரி பண்ணிக்கோ, எனக்கு மூட் இல்லாத போது! சும்மா செக்ஸுக்காக! செக்ஸ்லாம் என்ன பெரிய டீலா?"

"நீங்க சீரிஸாத்தான் சொல்றீங்களா? இல்லைனா?"

"உனக்கு எப்படித் தெரியுது?"

"எனக்குப் புரியலை!"

"நான் கொஞ்சம் உன்ன மாதிரியே கவனமா இருக்கேன். பணவிசயம் மட்டும் இல்லை செக்ஸ்லயும் ஒருவரை ஒருவர் "அப்யூஸ்" பண்ணக்கூடாதுனு நம்புறேன், திவ்யா."

"விஜய்! வேற ஏதாவது பேசுவோமா?"

திவ்யாவைப் பார்த்து புன்னகைத்தான் விஜய்.

"எதுக்கு இந்தப் புன்னகை?"

"நீ வந்தபோது "ஐயோ திவ்யா எவ்ளோ அழகாயிருக்காள்"னு நெனச்சேன்."

"ஏன் இப்போ?"

"உன்னை வருங்கால "கவனமான மனைவியா"ப் பார்க்கும்போது. சத்தியமா அழகெல்லாம் தெரியலை!"

"என்னதான் தெரியுது?"

"உண்மையைச் சொல்லட்டுமா? உன்னைப் பார்த்தால் பயம்மா இருக்கு."

"எனக்கும்தான். உங்க கேள்விகளைக் கேட்டதும் எனக்கும் அப்படித்தான் இருக்கு."

"அருவருப்பா இருந்ததா?"

"அப்படித்தான் இருக்கு "

"இப்படி ஒருவரை ஒருவர் பாத்து பயப்படுறவங்க நல்ல தம்பதிகளா இருக்க முடியாது! பேசாமல் ஃப்ரெண்டா இருந்துருவோமா?"

"அப்படினா?"

"எனக்கென்னவோ இந்தக் கல்யாணத்தில் நம்ம இருவரில் யாராவது ஒருவர் நிச்சயம் நஷ்டப்படப்போறோம்னுதான் தோனுது!"

"அதனால?"

"நீ நஷ்டமடையக்கூடாதுனு பார்க்கிறேன்."

"ரொம்பப் பெரிய மனசுதான்!"

"இல்லை, வடிகட்டின சுயநலம். I don"t want to be blamed for your loss!"

"சரி, இப்போ பேசியதை  எல்லாம் மறந்துடுவோம். என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க!"

"என்ன திடீர்னு ஞானோதயம்?"

"இல்லை, இவ்ளோதூரம் பல கோணத்தில் யோசிக்கிறீங்களே. உங்களை கட்டிக்கிட்டா பரவாயில்லைனுதான் தோனுது!"

"தியாகமா?"

"அதெல்லாம் இல்லை!"

"OK, let us get married and fuck each other in every possible way!"

"YES!" என்றாள் திவ்யா!


Monday, May 28, 2012

கோவி! மணவிலக்கு குறைந்தால் கள்ளத் தொடர்பு அதிகமாகுமா?


சுவனப் பிரியனுக்கும் கோவிக்கும் நடக்கிற விவாத யுத்தம் ரெண்டு பேரையும் தவறான கருத்துக்களை பரப்ப செய்கிறது போல் ஆயிப்புடுச்சு.. அதுக்கு உதாரணம்...

I am not getting into gk's title, I am concerned about this particular statement! நான் கோவியின் தலைப்பு பத்தி பேசவில்லை. அவர் சொல்லியிருக்கிற இந்தக் கருத்தில் (கீழே) ஒப்புதல் இல்லை!


####பொருளாதாரத்திற்கு ஆணைச் சார்ந்திருக்கும் அடிமைகளாக பெண்கள் இருக்கும் சமூகத்தில் மணவிலக்கு குறைவாக இருக்கும், ஆனால் கள்ளத் தொடர்புகள் உள்ளிட்ட மற்ற தற்சமூக சீர்கேடுகள் மிகுதியாக இருக்கும். வெளி உலகுக்கு கட்டுப்பட்டவர்களாக காட்டப்படுபவர்கள் கட்டி வைத்து தான் காட்டப்படுகிறார்கள் என்பது நாம் அறியாத ஒன்றா ?####

எனக்கு உண்மையிலேயே புரியலை. மணவிலக்கு குறைவாக இருந்தால் கள்ளத் தொடர்பு அதிகமா இருக்குமா?   அப்படி எல்லாம் நாம் சொல்லிவிட முடியாது. I dont think there is any hard and fast rule like that! சுதந்திரம் கெட்ட வழிகளையும் திறந்துவிடத்தான் செய்யுது.

இல்லைனா கள்ளத் தொடர்பு அதிகமா இருக்க இடங்களில்தான் மணவிலக்கும் அதிகம் இருக்கா? Is this not TRUE??? நான் பார்த்த வரைக்கும் மணவிலக்கு அதிகம் உள்ள ஒரு சமூகத்தில் தான் கள்ளத் தொடர்பும் அதிகம் இருக்கு. ஒரு பெண் பணச்சுதந்திரம் அடையும் போது அவங்களுக்கு கெட்ட வழியிலும் தைரியம் வரத்தான் செய்யும் னு கூட விவாதிக்கலாம்.

சுவனப் பிரியன் சொல்றது தப்புனா கோவியின் வாதமும் தப்புதான். கோவியின் வாதம் சரி என்றால் அடக்கி வைக்கப்பட்ட நம்ம பாட்டிகள், அதுக்கு முந்திய ஜெனெரேசன் எல்லாம் ஊர் மேய்ந்தார்கள்னு அவரு சொல்வதாகவும் அர்த்தம் கொள்ளலாம்.  யாரையோ கேவலப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்வது போல இருக்கு மேலே இவர் வாதம் செய்யும்விதம்.

கோவி ! இன்னைக்கு படிச்ச, லிபெரல் சொசைட்டில மனைவியையே கூட்டிக் கொடுக்கிறான். ஆமா, இங்கே மணவிலக்கு குறைவதற்கு காரணம் "இது கள்ளத் தொடர்பு இல்லை" னு சொல்றீங்க போல !

Friday, May 25, 2012

கொடுமையான மிகவும் கொடூரமான வியாதி லூபஸ்!

சமீபத்தில் ஒரு பழைய நண்பரிடம் (ஓல்ட் ஃப்ரெண்டு) ரொம்ப நாள் கழிச்சு பேச நேர்ந்தது. அதாவது ஒரு 5 வருடத்துக்குப் பிறகு பேசியதாலே. எங்களுக்கு தெரிந்தவர்களில் யாரு யாரு செத்துட்டா, யாரு யாரு உயிரோட இருந்துகொண்டு யாரைக் கொன்னுக்கிட்டு இருக்கா, யாருக்கு வேலை போச்சு, யாரெல்லாம் இந்தியா திரும்பிப் போயிட்டாங்க, யாரு யாருக்கு மாரிட்டல் ப்ராப்ளம்ஸ், யாரு டைவோர்ஸ் வாங்கிட்டானு பல கதைகள் பேசும்போது..

எனக்கு சுமாராக தெரிந்த ஒரு பெண்மணிக்கு "லூபஸ்" என்கிற வியாதி வந்துவிட்டதாக நணபர் வருத்தத்துடன் சொன்னாரு.

லூபஸா? அப்படினா என்ன?னு கேட்டேன்.

கூகில் பண்ணிப் பாரு! எனக்கும் டீட்டயிலா தெரியாது! ஆனா கொடூரமான வியாதி என்றார்.

கூகில் பண்ணி பார்த்ததும்..லெப்ரோஸி, டி பி, எயிட்ஸ் போன்ற வியாதிகளை விட லூபஸ் கொடுமையானதுனு கற்றுக்கொண்டேன்.

என்ன சொல்ல வர்ற? கொடுமையானதுனா என்ன? அது வந்தால் சீக்கிரம் செத்துடுவாங்களா?னு உங்களுக்கு கேள்வி எழும்.

அப்படினு நான் சொல்ல வரலை...அதாவது நமது உடம்பிலே எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி சண்டை போடுவதற்கென்றே ஒரு சில செல்கள் இருக்கு. அவைகள் ஏதாவது பாக்டீரியா அல்லது வைரஸ் நம் உடம்பிற்குள் வந்ததும், அவைகளைக் கொல்ல, எதிர்ப்பு சக்தியை உருவாக்கி போராடும். 

ஜலதோசம், காய்ச்சல் கொடுக்கிற வைரஸை எல்லாம் எளிதாக அடித்து கொன்னுபுடும்.

டி பி, லெப்ரோஸி போன்ற பாக்டீரியாக்களிடமும் சண்டை போடும் ஆனால் ஓர்ளவுக்குத்தான். ஆண்ட்டிபயாட்டிக்ஸ், ஆண்ட்டி பாக்டீரியல் ஏஜண்டுகள் (அதாவது மருந்து மாத்திரைகள்)தான் பாக்டீரியாக்களை அடக்கி ஒடுக்க உதவும்.

இந்த எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி போராடும் செல்களை தாக்குவதுதான் எச் ஐ வி! அதனால அது கொஞ்சம் பிரச்சினையான வியாதி.

இந்த லூபஸ்ங்கிற இந்த  வியாதில என்ன கொடுமைனா, நம்ம உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி, நம் உடம்பில் உள்ள நல்ல செல்களையே தாக்க ஆரம்பிச்சுடுமாம்! :( அதுபோல செய்வதால் ஏற்படும் ஒரு வியாதி இது. அதாவது வெளியிலிருந்து வரும் கிருமிகளை கொல்ல உருவாக்க வேண்டிய எதிர்ப்பு சக்தி உருவாக்கும் நமது செல்கள்,  நம் உடம்பிலே உள்ள நல்ல செல்களையே தாக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி பலவித பிரச்சினைகளை உண்டாக்குமாம்! இதுதான் கொடுமை.


சில படங்கள் இங்கே!


 Swollen Hands - Raynauds


Discoid Lupus Photo
 
 Lupus is an autoimmune disease where the body's immune system becomes hyperactive and attacks normal, healthy tissue. When the body's immune system is operating normally it produces antibodies to fight viruses and bacteria and other antigens. Lupus makes the antibodies created unable to differentiate between antigens and healthy tissue causing the antibodies to attack healthy tissue. Resulting symptoms include inflammation, swelling, damage to joints, skin, kidneys, blood, heart and lungs.
இது ஒரு மாதிரி அரிதான வியாதினு சொல்லலாம். மற்றும் இன்னும் ஏன் இப்படி நமது செல்கள் "க்ரேஸியா" மாறி, நம்மையே "தற்கொலை" செய்யுதுனு புரியலைனு சொல்றாங்க. இதில் பல வகைகள்  இருக்காம்!

ஆமா, இதை நாங்க தெரிஞ்சு என்ன ஆகப்போது?னு கேக்குறீகளா? யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வலையுலகம்னு ஒரு கெட்ட எண்ணம்தான்!


Thursday, May 24, 2012

முட்டாள் வருணே! இது உன் தற்கொலை முயற்சி!

முட்டாள் மானே!
சிங்கம் உன்னை கடித்துத் திண்பது
உன்னை தண்டிக்க அல்ல
இந்தப் பாவிக் கடவுள் அதற்கு கொடுத்த
பசித் துன்பத்தால்

முட்டாள்  மீனே!
நீ தூங்கும்போதும் நீந்துவது
உனக்கு கெடச்ச பெரிய கிஃப்ட் அல்ல
உன்னால மல்லாக்கப் படுத்துத்
தூங்க இயலாது என்பதால்

முட்டாள் பதிவரே!
நீர் பதிவெழுதுவது
உலகைத் திருத்த அல்ல
உன் அரைகுறைத் தமிழை
எழுதி எழுதி ஓரளவுக்கு செப்பனிட

முட்டாள் வருணே!
நீ இஷ்டத்துக்கு உளறும்
இதெல்லாம கவிதையும் அல்ல
கவிஞர்கள் உன்னை கொலைசெய்யத் தூண்டும்
உன் தற்கொலை முயற்சி!

Wednesday, May 23, 2012

அதர்வ வேதம் பற்றி ஜெயமோஹன்!

 வரவர நான் ஜெயமோஹன் ரசிகராகிவிட்டேனானு எனக்கே சந்தேகம் வருது. அவர் தளத்தில் உள்ள ஒரு வேதம் சம்மந்தப்பட்ட பதிவை வாசிக்க நேர்ந்தது. இதுல என்ன சொல்ல வர்ரார்னா, 

வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?


***வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது.***

அதாவது, வெள்ளைக்காரன் வந்துதான் எல்லா சாதி கலகத்தையும் நமக்குள்ள உண்டாக்கிவிட்டுட்டான். வேதங்கள் பிராமணர் மற்றும் உயர் சாதியினர் தவிர மற்றவர்களிடம் இருந்து விலக்கப்பட்டது என்பது பொய் என்கிறார். சரி, அப்படியே எடுத்துக்குவோம்..

கீழே கொடுக்கப்பட்டுள்ளதை ஒரு நிகழ்வை (கதை?)வாசிங்க!!!


இன்னொரு வேடிக்கை உண்டு அந்த அதர்வ வேதச் சடங்கை ஒரு பிராமணன் தவறிப்போய் கேட்டுவிட்டால் அவனுக்கு தீட்டும் விலக்கும் வந்துவிடும். கேரளத்தில் உள்ள வலியதளி என்ற கோயிலைப்பற்றிய கதை உதாரணம். அங்கே நதிக்கரையில் இருந்த இரு சூலாயுதங்களை இரு நம்பூதிரி சிறுவர்கள் பூசை செய்து வந்தார்கள். இளையவன் அப்பகுதியில் உள்ள ஆசாரிகள் செய்யும் ஒரு அதர்வவேதச் சடங்கை ஒருமுறை கவனித்து மந்திரத்தை மனனம் செய்துகொண்டான்

ஒருநாள் பூசை செய்யும்போது ஒரு சூலம் பயங்கரமாக ஆடியது. எந்த மந்திரத்தாலும் ஆட்டத்தை நிறுத்தமுடியவில்லை. இளையவன் ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்த்ரீக விதிப்படி அதை உயிர்ப்பலியாக உருவகித்து அந்த சூலத்தில் அடித்து பிளந்தான்.ஆட்டம் நின்றது

ஆனால் அவனுக்கு எப்படி அதர்வம் தெரியும் என்று நம்பூதிரி சபை விசாரித்து கண்டுபிடித்தது. அந்த இளையநம்பூதிரியும் அவன் வம்சத்தில் வருபவர்களும் நிரந்தரமாக சாதிவிலக்கு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒரு உபசாதியாக நீடித்தார்கள். கேரளத்தின் உயிர்ப்பலி இருந்த கோயில்களில் தாந்த்ரீக பூசைகள் செய்பவர்கள் அவர்களே. அவர்கள் இளையது என அழைக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் வேதங்கள் உட்பட எந்த ஞானமும் துறவிகளுக்கு விலக்கப்படவில்லை. ரிஷிமூலம் பார்க்கப்படலாகாது என்ற நெறி என்றும் இருந்தது. தீண்டப்படாத சாதியைச்சேந்த நாராயண குரு துறவு வாழ்க்கையில் வேதவேதாங்கங்களை ஐயம்திரிபறக் கற்றார் என்பது நம் முன் உள்ள வரலாறு.

வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது. இந்தியாவெங்கும் உள்ள ஆசாரங்கள் சடங்குகளை ஆரய்ந்து நம் வரலாற்றை நாமே எழுதிக்கொள்ளமுடியும். அப்போது பதினெட்டாம் நூற்றாண்டில் அன்றைய குறைவான தகவல்களுடன் ஐரோப்ப்பியர் உருவாக்கிக்கொண்ட பல முன்முடிவுகள் உடையும்.

சரி என்ன விசயம்னு பார்ப்போம்!

அதாவது சூலம் ஆடுச்சாம்.  எந்த மந்திரம் சொல்லும்போதும் சூல ஆட்டம் நிற்கவில்லையாம்! உடனே அந்த "இளையவன்" ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்ரீக விதிப்படி உயிர்பலியாக உருவகித்து, அந்த சூலத்தில் அடித்து பிளந்ததும். ஆடிக்கிட்டு இருந்த சூலம், ஆடாமல் (உயிர்பலி கெடச்சதும்) நின்னுடுச்சாம்!!!

நெஜம்மாவே இது ஒரு உண்மையான நிகழ்வா? அப்படினா.. அந்த அதர்வமந்திரம் அந்த சூல ஆட்டத்தை நிறுத்திப்புடுச்சுனு எல்லாரும் நம்புறாகளா?

இல்லைனா இது சும்மா ஒரு கதையா??

இது நெஜம்மாவே நடந்த ஒரு நிகழ்வென்றால், என்னை இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னால்.. 

ஏதோ நிலநடுக்கத்தில் சூலம் ஆடியிருக்கலாம். பல மந்திரங்கள் சொல்லும்போது, அந்த நில நடுக்கம் எதார்த்தமாக நிற்கவில்ல! அப்புறம், இந்த இளையவர், அதர்வமந்திரம் சொல்லி "தேங்கா உயிர்பலி" கொடுத்த போது எதார்த்தமாக அந்த நிலநடுக்கும் நின்றுவிட்டது!

இதப்போயி, அந்த இளையவரின் அதர்வ மந்திர சக்திதான் நிறுத்திப்புடுச்சுனு சொல்வதெல்லாம் அறியாமை இல்லையா?!

Monday, May 21, 2012

சூர்யாவுடன் டூயட் பாடும் இளம் தமிழ்ப்பெண்கள்!

அப்பா, அம்மா குடும்பத்தினர் முன்னாலேயே, நீங்க ரொம்ப ஹாட், உங்களோட கொஞ்சம் டாண்ஸ் ஆடிக்கிறேன் னு "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் சின்னப் பொண்ணுங்க எல்லாம் வந்து சூர்யாவுடன் அவரோட கையை கோர்த்துக்கொண்டு டாண்ஸ் ஆடுறாங்க!

இதேபோல் ஒரு நடிகை ஹோஸ்ட்டாக இருந்தால் இளம் வாலிபர்கள் அவங்களோட டாண்ஸ் ஆடக் கூப்பிட்டால் அதை எல்லாம் எளிதாக எடுத்துக்குவாங்களா? னு தெரியலை! அந்த வாலிபர்களை மட்டமாப் பார்ப்பாங்கனு நெனைக்கிறேன்.

நம்ம சமுதாயம் ஒரு பக்கம் ரொம்ப பயங்கரமா  முன்னேறிக்கொண்டுதான் போகுது. நாளைக்கு ஒரு க்ரேஸி கேர்ல் சூர்யாவை பப்ளிக்கா கிஸ் பண்ணினால்க்கூட ஆச்சர்யப் பட எதுவும் இல்லை! இதெல்லாம் என்ன பெரிய மேட்டரா? ம்பாங்க! அதையெல்லாம் விஜய் TV அழகா எடிட் பண்ணிடுவாங்க என்பதெல்லாம்  வேற விசயம்.

சில வருடங்கள் முன்னால நடிகை ஷில்பா ஷெட்டி ரிச்சேர்ட் கியரை கிஸ் பண்ணியதை பெருசாக்கியது நமது சமுயதாயம். அவங்க இருவருமே நடிகர்கள். ஆனால் இங்கே என்னடானா கல்லூரியில் படிக்கும் கல்யாணம் ஆகாத டீன் ஏஜ் பொண்ணுங்க எல்லாம் காசுவலாக நீங்க ஹாட், உங்களோட கனவுலதான் டாண்ஸ் ஆடியிருக்கேன், நிஜத்தில் ஆடனும்னு சூர்யாவுடன் நடனமாடுறாங்க!!

சூர்யா நிச்சயமாக மிகவும் நாகரிகமாக நடந்துகொள்கிறார்னு சொல்லனும். ஆனால் அவரோட அப்பா சிவக்குமார் இதையெல்லாம் பார்த்து அந்தப் பொண்ணுங்களை நெனச்சு, பெண்கள்  முன்னேறிட்டாங்கனு பெருமைப் படுவாரா?  இல்லை தலையில் அடிச்சுக்குவாரா? னு எனக்குத் தெரியலை! இல்லை அவரு கொஞ்சம் முந்திய ஜெனெரேஷனை சேர்ந்தவர் இல்லையா?

என்னவோ போங்கப்பா!


Monday, May 14, 2012

கவிஞரே! ஏன் இந்த வீண் வம்பு?

சொல்லவந்த ஒரு விசயத்தை
தெளிவாக சொல்வதை தவிர்த்து
கவிதை வடிவாக்க வேண்டுமென்பதால்
மடக்கி மடக்கி எழுதி
பத்தி பத்தியாக எழுதி
அர்த்தமற்ற கற்பனையை
வலுக்கட்டாயமாகக் கலந்து
தேவையேயில்லா வர்ணனையை
அங்கங்கே அதில் பூசி மொழுகி
பிறரையும் குழப்பி தானும்
குழம்புவதுதான் கவிதையா?

எந்திரனை மிரட்டும் ஒரு கல் ஒரு கண்ணாடி?

உதயநிதி ஸ்டாலின் நடிக்க ஆசைப்படுறாரு, நடிக்கப் போறாருனு கேள்விப்பட்டதும் "உங்களுகெல்லாம் எப்படி இப்படி ஒரு ஆசை வருதுனு  தெரியலை?"னு எனக்கு ரொம்ப சிரிப்பாத்தான் வந்தது. ஏன் இந்த நடிக்கிற ஆசை யாரையும் விடமாட்டேங்கிதுனு அடிக்கடி  எழும் கேள்விதான் இது.

சரி, உதய நிதிட்ட பணம் இருக்கு, ஏதாவது "இன்கம் டேக்ஸ்" கணக்குக் காட்ட இந்தத் தோல்விப்படம் உதவும்னு நான் நெனைக்கலைனு சொன்னால் அது பச்சைப் பொய்!

போதாக்குறைக்கு, அம்மா சிறுபிள்ளைத்தனமாக, ஓரளவுக்கு தகுதியுள்ள  இந்தப் படத்துக்கு கவனமாக வரிவிலக்கும் கொடுக்காமல் விட்டுருச்சுனு வேற சொன்னாங்க. அம்மா ஆட்சியில் "அய்யா பேரன்" படம் வந்து, அது ஓடி, அட போங்கப்பா!

நான் இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை! ஆனால் காமெடி நல்லாயிருக்கு, படம் ஹிட்டுனு சொன்னாங்க! இனிமேல்தான் பார்க்கணும். சரி ஓரளவுக்கு நல்லாப்போகும்னு சொன்னதும், ஏதோ பொழச்சுட்டாங்க, போட்ட காசை எடுத்துப்புடுவாங்கனு நெனச்சா..

இன்னைக்கு சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சன் பார்த்தால் 15.09 கோடியில் வந்து நிக்கிது! 

நண்பன் ஒரு 7.5-8  கோடி கலக்ட் பண்ணுச்சு!

சிவாஜி 12 கோடி போல!

எந்திரனே 16 கோடியோ என்னவோதான் வசூல் செய்தது.

உதய நிதி நடிச்ச ஒரு கல் ஒரு கண்ணாடி, இப்போவே 15 கோடியிலே வந்து நிக்கிது, இன்னும் ஒரு மூனு வாரத்துல 20 கோடிக்குப் போயி, சென்னையில் ஆல்-டைம் #1 பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சன் இடத்தை பிடிச்சுடும் போல!

இந்தப் படம், வசூல் மாமழையால், கரகாட்டக்காரன், சின்னத்தம்பி போன்ற பட வரிசையில்  இடம் பெறுகிறது!


Ranking based on Chennai Box Office Collections from
May 11th 2012 to May 13th 2012

Oru Kal Oru Kannadi

Cast: Udhayanidhi Stalin, Hansika Motwani, Santhanam 
Direction: M Rajesh
Music: Harris Jayaraj
Production: Udhayanidhi Stalin
Review
Trailer
Music Review
Gallery

This film is a hat-trick win for director Rajesh. Santhanam has proved it again and Udhayanidhi can be proud of a decent debut.

Trade Talk:
It has been 25 days and OKOK continues to make merry at the box office.

Public Talk:
Rajesh, Santhanam and Udhayanidhi make a great team and keep the laughs coming.

No. Weeks Completed : 4
No. Shows in Chennai over this weekend : 300
Average Theatre Occupancy over this weekend : 75 %
Collection over this weekend in Chennai: Rs. 8,507,616
Total collections in Chennai: Rs. 15.09 Crore
Verdict: Super Hit






Ranking based on Chennai Box Office collection from the following areas:
Anna Saalai, Adyar, Ambattur, Aminjikarai, Ashok Nagar, Avadi, Ayanavaram, Chrompet, Egmore, Injambakkam, Karapakkam, Kilpauk, Kolathur, Koyambedu, Minjur, Moolakadai, Mount Road, Mylapore, Navalur, Perambur, Purasaiwakkam, Redhills, Royapet, Royapuram, Saidapet, T Nagar, Thiruvanmiyur, Tondiarpet, Vadapalani, Villivakkam, Virugambakkam, West Mambalam



Sorurce:  http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-may-14/oru-kal-oru-kannadi.html

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல எந்திரன் கலக்சனை, கமலால உடைக்க முடியலை, விசையால உடைக்க முடியலை! ஆனால், உதய நிதி ஸ்டாலினுடைய ஒரு கல் ஒரு கண்ணாடி உடைத்துவிட்டது. இதெப்படி இருக்கு?

I am really shocked!!!

எல்லாம் நேரம்தான்!

Friday, May 11, 2012

ஜெயமோஹனை எரித்தால் வைரமாவார்னு ரிக் வேதம் சொல்லுதா?!

நான் கேள்விப்பட்டவரைக்கும் தமிழ் இலக்கிய மேதைனா இன்னைக்கு இவருதான், அதான் ஜெயமோவந்தான் னு சொல்றாங்க.  சரி, இருந்துட்டுப் போகட்டும்!

இப்போ இவரு தளத்தில் ஒரு விவாதத்தைப் படிச்ச பிறகு..

 சயன்ஸே சொல்லுது..

இவரு என்ன அறிவியலையும் கரைச்சுக் குடிச்ச மாமேதையா? என்கிற சந்தேகம் எழுகிறது. இல்லைனா  தன்னைப்போல மரைகழண்ட மதவாதிகள்தான் அறிவியலாளர்களைவிட உயர்ந்தவர்கள் என நம்பும் "படிப்பறிவுல்லாத" முட்டாளா?

மதமோ, இலக்கியமோ, ஆன்மீகமோ என்ன எழவைப்பேசினாலும் தாந்தான் பெரிய மேதைனு  எழுதும் இவரு இப்போ அறிவியலையும், அதை எப்படி மற்றவர்கள் அணுகனும்னு  விமர்சிக்க வந்துட்டாரு!!!

* ஆமா, இலக்கியம் எவனும் ஒழுங்காப் படிக்கிறதில்லை! சும்மா நுனிப்புல் மேய்கிறார்கள்!  என்று குற்றம்சாட்டிப் பேசுற இந்தாளு எத்தைனை அறிவியல் கட்டுரைகள் படிச்சு இருக்காரு?

* Does he really know what all the top scientific journals ? (please don't go google it now!).

*  இல்லைனா எத்தனை அறிவியல் மாணவர், ஆசிரியர்கள், பேராசிரியர்களிடம் பழகி, உறையாடி, அறிவியல்னா என்ன? அறிவியலாளர்கள் சிந்தனை எப்படி இருக்கும் கத்து இருக்கார்னு தெரியலை.

இந்தாளை  மதிச்சு, அறிவியல்னா என்ன அதை எப்படி அணுகனும்னு ஒருத்தரு சீரியஸா கடிதம் எழுதி..(இது மாதிரி மரமண்டைகளுக்கெல்லாம் அறிவியல் பற்றி எழுதுற இந்த ராஜாவை மொதல்ல அடிக்கனும்!..)

மேதைக்கு எல்லாம் தெரியும்னு புரியாத இவரு, மேதையிடம்  அறிவியல் பத்தி சீரியஸா விளக்குறாரு இந்த ராஜா..

* எந்தக் கருத்தையும் அறிவியல் சோதனைகளின் மூலமே பரிசோதிக்க இயலும். அது திட்டவட்டமாக வகுத்துக் கொண்ட வழி. அதன் தவறுகளும் திருத்தங்களும் தடுமாற்றங்களும் வளர்ச்சியும் பிரபஞ்ச தரிசனமும் அதன் உள்ளே இருந்தே வர இயலும். வேறு எதையும் அது ‘துணைக்கு’ அழைக்க முடியாது.

* தூய அறிவியல்வாதம் செய்வது மூடத்தனம் அல்ல. அவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் நிற்கிறார்கள். நீ மதத்தையும் அறிய வேண்டும் என்று சொல்வது அவர்கள் கருவிகளைப் பிடுங்குவதற்குச் சமம்.

* காப்ரா முடிவுரையில் எவ்வளவுதான் நவீன அறிவியல் பார்வையும் கிழக்குப் பார்வையும் ஒன்றுபோல இருந்தாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார். மிக நல்ல விஷயம்.

அன்புடன்,
ராஜா.

ஆனால் சும்மா விடுவாரா எல்லாம் அறிந்த மேதை ஜெயமோவன்?

எதிர் வாதத்தில் என்னென்ன சொல்கிறார் இல்லை பிதற்றுகிறார்னு பாருங்க..

# அறிவியல்நோக்கு மையமானது, முதன்மையானது என்ற எண்ணத்தை நீங்கள் தவிர்த்துப்பார்த்தீர்கள் என்றால் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கமுடியும். மனிதனின் அடிப்படைக் கேள்விகள், அவற்றின் பதில்களைப்பற்றிய முன்ஊகங்கள் ஆகிய இரண்டும் அறிவியல், தத்துவம்,கலை ஆகிய அனைத்துக்குமே பொதுவானவைதான். அவற்றின் அறிதல்முறையும் நிரூபணமுறையும்தான் வேறுவேறானவை.

அதாவது அறிவியலைவிட இந்து மதம்தான், மத நூல்கள், வேதங்கள்தான்  முதன்மையானதுனு நீங்க ஏத்துக்கனும் என்பது புதைந்து இருக்கு இங்கே! இதில் மதம், மதநூல்கள் என்கிற வார்த்தைகள், தத்துவம், கலை என்கிற போர்வையில் மறைந்து கொண்டு இருக்கு! இல்லை சூசகமாக இந்த விஷமியால் மதம் மறைக்கப் பட்டு இருக்கிறது. 

அப்புறம், இந்த நிரூபணம் என்பது  அறிவியலுக்கே உரித்தானது இல்லையா? அது கலைக்கோ, தத்துவத்துக்கோ அல்லது மதத்துக்கோ, கடவுளுக்கோ கிடையாது என்பதை இந்தாளுக்கு யாராவது சொல்லுங்கப்பா!

 
# அறிவியல் தன்னுடைய வினாக்களையும் முன்ஊகங்களையும் அறிவியல் என சொல்லப்படும் ஒரு தர்க்கச்சூழலுக்குள் இருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளுமென்று எவரும் சொல்லமுடியாது.

அப்படியா!!! மஹா மேதை சொல்லுறாரு! அறிவியல் மேதைகள் எல்லாரும் வாயை மூடிக்கிட்டு கேட்டுக்கோங்க!

உண்மை என்னனா, அறிவியல் அதுபாட்டுக்கு இருக்கு! அது முன்யூகங்கள் எல்லாம் செய்வதில்லை! அறிவியலைப் பற்றி விமர்சிக்க எந்தக் கொம்பனுக்கும் தகுதி இல்லை! அறிவியலாளனை வேணா விமர்சிக்கலாம்!


# அவை அறிவியலாளனின் ஆழ்மனத்தில் இருந்து பிறக்கக்கூடியவை. அவற்றின் வேர்கள் மானுடத்தின் கூட்டுமனத்தில், பண்பாட்டுக்குறியீடுகளில் உறைகின்றன. அந்த ஆழத்தில் அறிவியலும் தத்துவமும் கலையும் எல்லாம் ஒன்றே.


அதாவது ஐயா என்ன சொல்றார்னா..அறிவியலாளனின் சிந்தனைக்கு ஆழ்மனதில் உதவுவது மதம், மத நம்பிக்கை, மத நூல்கள் மற்றும் மதவாதிகளின் போதனைகள் என்று எல்லாரும் ஏத்துக்கனும்னு சொல்றாரு!!! 

மதம் என்கிற வார்த்தை இங்கே மறைக்கப்பபட்டு பண்பாடு, கலை, தத்துவம் என்கிற வார்த்தைகள் மதத்திற்காக துணை நிற்கின்றன.


# ஆகவே ஒரே வினாவுக்கு இவை அளிக்கும் பதில்களை ஒப்பிடுவதோ, அல்லது ஒரு துறையின் பார்வையை இன்னொன்றைக்கொண்டு புரிந்துகொள்ளமுயல்வதோ ஒன்றும் பெரும்பிழை அல்ல.


அறிவியலில் நீங்க கொண்டு வருகிற விடைகள் நாங்க படிச்சு தெரிஞ்சுக்கிட்டு,  இதையெல்லாம் எங்க மதநூல்கள்லயே சொல்லி இருக்கு. எங்க வேதங்கள், மதநூல்கள் வச்சு டி என் ஏ, ப்ரோட்டீன், எல்லாத்தையும் விளக்க முடியும்னு நாங்க சொல்லுவோம். "அண்ணே! எங்க விடைகளை ஏன்யா திருடி, மதச்சாய்ம்  பூசி மொழுகிற" னு ஒரு பய இவனுககிட்ட கேக்கக்கூடாது!


ஓர் அறிவியல் கண்டுபிடிப்பின் பண்பாட்டுவேரை தேடிச்செல்வதோ அல்லது ஒரு பண்பாட்டுக்கூறின் அறிவியல்நீட்சியை ஆராய்வதோ மிக மிக அடிப்படையான விஷயம்.

 பண்பாட்டு வேர்??? என்ன எழவுடா அது? 

மறுபடியும் ஆராய்ச்சி!!! ஆமா, ஜெயமோவா! மதவாதிகள் எதுக்குப்பா ஆராய்ச்சி எல்லாம் செய்றாங்க? இவனுக மூளை ஆராய்ச்சியை அணுகும் சக்தி இல்லாததாச்சே!!! அதெல்லாம் மேதை உமக்குத் தெரியாதா???


# அது அறிவியலின் ‘புனிதமான உண்மையை’ பிற துறைகள் ‘திருடிக்கொள்ளும்’ முயற்சி அல்ல.

ஆமா என் அப்பன் குதிருக்குள்ள இல்லை!!!

அறிவியலில் கண்டுபிடிக்கப் பட்டு வரும் விடைகளை எடுத்து, திருடி, இது அந்த வேதத்திலேயே இருக்கு. அதனால அந்த வேதக் குப்பைதான் முதன்மையானதுனு நாங்க சொல்லத்தான் செய்வோம். ஏன்னா எங்க வேதம்தான் அறிவியலைவிட மூத்தது. அதில் எல்லாமே இருக்கு! ஆனால் நீங்க இப்போ கண்டுபிடிச்சு சொன்னதும்தான் நாங்க அதையெல்லாம் தோண்டி எடுக்கிறோம்!

# உதாரணமாக ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் இன்றும் அறிவியல் பிரபஞ்ச ஆய்வாளர்கள் வினவும் அடிப்படை வினாக்களை தானும் எழுப்பிக்கொள்கிறது.

ரிக் வேதம்? அதாவது ஒரு மத நூல்? பண்பாடு, கலை, தத்துவம்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சதுல இருந்து மதத்துக்கு, மதநூலுக்குத் தாவுது, வேதாளம்! 

சரி, அதனால என்ன? ரிக் வேதமென்ன? உலகறிவே இல்லாத சிறு பிள்ளைகூட அந்த கேள்விகளை எழுப்பும்! இதென்ன பெரிய விடய்ம?
ரிக் வேதமோ, சிறுபிள்ளையோ, வினாவை எழுப்புவதல்ல, பெரிய விடயம்! புதிய புதிய விடையை கொடுப்பதுதான் முக்கியம்! அதை  யாரு கொடுக்கிறா எனபதுதான் முக்கியம்! அப்புறம் இன்னைக்கு கொடுத்த விடையை நாளைக்கு உடைத்து அது தப்புனு இன்னொருவர் சொல்லுவதையும் ஏற்றுக்கொள்வது அறிவியலாளன் மட்டுமே! அது மதத்துக்கோ, அல்லது கலைக்கோ, தத்துவத்துக்கோ, மதவாதிக்கோ ஒருபோதும் ஒத்துவராது!

# இன்றைய பிரபஞ்சவியல் சென்று முட்டிநிற்கும் திகைப்பை தானும் பதிவு செய்கிறது. ஓர் ஆய்வாளன் ரிக்வேதத்தின் அந்தப்பாடலை இன்றைய பிரபஞ்சவியலுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வைச்செய்தானென்றால் உடனே அதை மதத்தையும் அறிவியலையும் கலந்துகட்டி அடிப்பது என்று சொல்வதென்பது அறியாமை மட்டுமே.

ஆய்வு???மதவாதி எதுக்குப்பா ஆய்வாளன் ஆகிறான்? ஒரு ஆய்வாளன், அறிவியலாளன் என்பவன் எந்த ஒரு முந்தைய தவறுகளையும் ஏற்றுக்கொள்ளும் மனமுள்ளவன்! அப்படியொரு மூளையுள்ளவன். நீர் பிதற்றுகிற இந்த மதம்போற்றும் "மதவெறிபிடித்த ஆய்வாளனுக்கு" என்றுமே அந்த மனதோ மூளையோ வராது! அதான்  உம்மை மாதிரி ஆட்கள் இது மாதிரி எதையாவது உளறிக்கொட்டிப் பொழைப்பு ஓட்டுறீங்க!

-----------------------------------
Her is something for you!

You cant fool in Science. There will be serious consequences!! Look what happened when someone,  a big scientist, "improperly quoted" others' work without giving proper credit!!!

PM's science adviser apologises for plagiarism in science journal


NEW DELHI: India's top scientist and Prime Minister Manmohan Singh's adviser CNR Rao had to apologise to a leading scientific journal for reproducing text of other scientists in his research paper.

"The corresponding authors sincerely apologise to the readers, reviewers, and editors for this oversight and for any miscommunication," Rao and his co-author SB Krupanidhi said in an apology to 'Advanced Materials', a peer-reviewed journal covering materials science.
Remember! You cant steal someone's results and interpretation and strengthen rig vedha!!!

---------------------------



இந்த அறியாமைக்கூற்றுக்கள் நம்மிடையே உருவாவதற்கான முக்கியமான காரணம் நாம் அறிவியலை உள்ளூர தொழில்நுட்பம் என்று புரிந்து வைத்திருப்பதே. 

வந்துட்டாரு!!! அறிவிலை எப்படி நானும் நீயும், அறிவிலாளர்கள் எல்லாம் புரிந்துகொள்ளனும்னு சொல்ல!! எல்லாம் தெரிந்த இந்த மேதாவிக்குத்தான் தெரியும், எதை எப்படிப் புரிந்து கொள்ளனும்னு.. கேட்டுக்கோங்கப்பா!!!

# அறிவியலுக்கு கலையிலும் தத்துவத்திலும் மானுடப்பண்பாட்டின் எல்லா தளங்களிலும் வேர் உண்டு. எல்லா இடங்களிலிருந்தும் அது தன் வேர்நீரை எடுத்துக்கொள்கிறது.

அதாவது, மேதை என்ன சொல்றாருனா.. பண்பாடு, கலை, மதநூல்களில், (ரிக் வேதத்திலேயே) உலகமே 106+ தனிமங்களால் (இந்த ஆளையும் சேர்த்துத்தான்) ஆனதுதான் னு  சொல்லியிருக்கு?! உதாரணத்துக்கு நம்ம ஜெயவமோஹனை எரிச்சால் (no offense here) அவரு ஆக்ஸிடைசாக, டீஹைட்ரேட் ஆகி, கார்பன் டையாக்ஸைடாகி, கடைசியில் வெறும் கரியாக, கார்பனாகிவிடுவார்னு பண்பாடு கலை தத்துவும் வேதம் எல்லாத்துலயும் "oxidising equation" எல்லாம் எழுதி சொல்லியிருக்கு? அப்படித்தானே?

இப்போ எரிந்த பிறகு இருக்க கார்பன் ஜெயமோவனும், மின்னும் வைரமும் ஒண்ணுதான்! ரெண்டுமே வெறும் கார்பன்ந்தான். ஆனா பார்க்க ஒண்ணு மின்னும், இன்னொன்னு கருப்பா கரியா இருக்கும்னு ரிக் வேதத்திலேயே சொல்லியிருக்கு! அப்படித்தானே?


ஆமா ரிக் வேதத்தில் என்னதான் சொல்லல? எல்லாமே சொல்லியிருக்கா???

# உலகமெங்கும் இன்று கல்வி என அளிக்கப்படுவது அறிவியல்கல்வி மட்டுமே. மெல்லமெல்ல மற்ற கல்விகள் அனைத்துமே பயனற்றவை எனப் புறந்தள்ளப்பட்டுவிட்டன.

அதுக்கென்ன பண்ணுறது? உண்மையத்தான் உலகமயமாக்க முடியும்! மத்வாதிகள் சிலர் இப்படி நீர் ஒப்பாரி வைப்பதுபோல் வைப்பதால் உலகமெங்கும் வெட்டி வேதங்களை முதன்மைக் கல்வியா ஆக்கிப்புடுவாங்களா என்ன?

மேலைநாடுகளாவது இலக்கியம், சிந்தனை போன்றவற்றுக்கு ஆரம்பநிலையில் ஒரு முக்கியத்துவத்தை அளிக்கின்றன. கீழைநாடுகள் ‘முன்னேற்ற வெறி’ யில் அறிவியலை அனைத்து நோய்களுக்கும் மருந்தான சஞ்சீவி போலத் தழுவிக்கொண்டுவிட்டன.

இப்போ என்ன பண்ணனும்? இந்த உருக்கமான உன்னதப் பதிவை வாசிச்சுப்புட்டு, எல்லாரும் அறிவியலை தூக்கி எறிந்துவிட்டு வேதம் படிச்சு பண்டாரமாகிடுங்கப்பா!

Monday, May 7, 2012

பெண்கள் உடைக்கு வரம்பு தேவையா? நீயா நானா?

கொஞ்ச நாளா நீயா நானா கோபிநாத் ஆண் - பெண் அலுவலகப் பிரச்சினைகள், ஈவ் டீஸிங் பிரச்சினைகள் எல்லாத்தையும் பெண்களை விவாதிக்க வைக்க ஆரம்பித்து விட்டார். இது ரொம்ப நல்ல விசயம்தான். இதில் பெண்கள் பலர் தங்கள் பக்கமுள்ள நியாயத்தை அழகா எடுத்து வைக்கிறாங்க.

* ஒரு பெண்கள் கல்லூரி பேராசிரியை சொல்றாரு.. மாணவிகளுக்கு இதுபோல் பிரச்சினையினு வரும்போது, நான் "அடக்கமாக", "தூண்டுதல் உண்டாக்காத ஆடை" அணியுங்கள்னு சொல்றேன்னு சொன்னாரு.

* இந்த கல்லூரிப் பேராசிரியையின் அறிவுரையை,  "சரியான தீர்வு இல்லை!", இல்லை "தவறான அறிவுரை" னு ஒரு கவிஞையும், டாக்டர் ஷாலினியும் சொன்னாங்க.

அப்போ எதுதான் தீர்வு? என்று வினவினார் அவர்.

ஆளுமைதான் தீர்வு என்றார் கவிஞர். அதாவது அடங்கிப்போனால்த்தான் ஏறி மேய்றானுக.  நான் உன்னைவிட எந்தவகையிலும் குறைந்தவ இல்லைனு நீ அவனுகளுக்கு தெளிவு படுத்துங்கிற மாதிரி அறிவுரைகள்..இந்த ஆளுமையின் பின் விளைவுகளைப் பத்தி யாரும் எடுத்து வைக்கவில்லை!

டாக்டர் ஷாலினி, ஓரளவு நல்லாவே பேசினார். :) பஸ்ல கை வைக்கிறவன் எல்லாம் அமைதியான பெண்களைத்தான் பலியாடாக்கிறான். துணிவுடன் எதிர்க்கும் பெண்களிடம் அப்படி செய்வது இல்லைனு சொன்னாரு. அதாவது, ஆளுமைதான் தீர்வு என்பதுபோல் இவரும் பேசினார்..இங்கே டாக்டர் எஸ் கொஞ்சம் தடம் புரண்ட மாதிரி தெரிஞ்சது எனக்கு. இங்கே ஈவ்டீஸிங்/காமெண்ட்ஸ் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தாங்க. இவரு ஃபிசிகல் அப்யூஸ் (இதெல்லாம் அப்பட்டமான  க்ரைம்) பத்தியும், ஆண் மனநோயாளிகள் மனநிலை பத்தியும் பேச ஆரம்பிச்சுட்டார்..

இதுல விவாதிக்க வந்த எதிர் அணி ஆம்பளைங்க நெறையப்பேரு கூறுகெட்ட தனமாத்தான் பேசினாங்க. ஒருவரை காமெண்ட் செய்வது தவறுனுகூட தெரியாமல் இருக்காங்க இந்த வாலிபக்குஞ்சுகள்! எங்கேயிருந்து இந்த மாதிரி அரைவேக்காடுகளை பிடிச்சுட்டு வந்தாங்கனு தெரியலை. ஒரு இளம் எழுத்தாளர் சுமாராப் பேசினாரு. பெண்களே, பெண்ணியவாதிகளே,  இதுபோல் அரைகுறை ஆடையை தவிர்க்கனும் என்றும், பெண் தன்னைத்தானே  ஒரு பார்வைப்பொருளா, அழகுப்பொருளா, கவர்ச்சிப் பொருளா சித்தரிக்கக்கூடாதுனு நம்புறாங்கனு சொல்லி கொஞ்சம் "ஸ்கோர்" பண்ணினார்.

சரி, ஆடைங்கிறது என்னுடைய இஷ்டம். நீ யாரு அதைச் சொல்ல? என்ற வாதமெல்லாம் சரிதான். அதை நிச்சயம் மதிக்கனும்தான். சரி நாளைக்கு வெயில் தாங்க முடியாமல், பிரா, ஜட்டியோடதான் போவேன்னு , அதுதான் எனக்கு கம்ஃபர்ட்டபிலா இருக்கு, இல்லைனா நிர்வாணமா போவேன்னு  எந்த ஒரு ஆணோ, பெண்ணோ இன்றைய நிலையில் சொல்ல முடியாது. அதனால இன்றைய நிலையில் ஆடைக்கும் நிச்சயம் ஒரு வரம்பு இருக்கத்தான் செய்யுது. தேவையானால் சட்டமே உள்ள நுழையும்.

அதனால நான் ஆடைனு நெனைக்கிற  பிரா, ஜட்டியோடதான் போவேன், உனக்கென்ன? னு யாரும் வாதம் செய்ய முடியாது. உடனே அப்படி நாங்க செய்யல/சொல்லல னு சொல்லுவாங்க. நீங்க சொன்னதா நான் சொல்லவில்லை! என்னுடைய கேள்வி, 

* இந்த "வரம்பு" கோடை எங்கே போடுவது என்பது பெண்ணியவாதிகளுக்கு தெரியுமா? இல்லைனா ஆடை என்பது  என் இஷ்டம் என்று வாதிட்ட பெண்களுக்கு தெரியுமா?  

* யாருக்குமே தெளிவாத் தெரியாதுனு நம்புறேன். இல்லைனா தெரிஞ்ச மாதிரி ஏதாவது பதில் சொல்லுவாங்க, ஆனால் அதில் "பதிலை"த் தேடிப்பார்த்தால் "எதுவும் தெளிவாக"  இருக்காது.

மறுபடியும் கேக்கிறேன்..

* ஆமா, அது எங்கே இருக்கு உங்க உடைக்கு வரம்புக் கோடு?

உடனே ஆண்களுக்கு எங்கே இருக்கு அந்த வரம்புக் கோடு இருக்கு? னு இன்னொரு கேள்வி கேட்க வேண்டாம்!

Are you not going say anything if someone comes half-naked and say, "that is my business???"