Thursday, July 11, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்-ஐந்து

ரேச்சல் வீட்டிலிருந்து கிளம்பிய மோகனுக்கு நேராக வீட்டுக்குப் போக மனமில்லை. விஜியின் அப்பார்ட்மெண்ட் நோக்கி ட்ரைவ் பண்ணினான்..

விஜியை அவனால் ஒரு போதும் வெறுக்க முடியாது. அவள் என்னதான் பேசினாலும், எப்படியெல்லாம் அவனை வெறுக்க வைக்க முயன்றாலும், அவனால் அவளை வெறுக்க முடியாது. அவளுடைய கோபம், சுடும் சொற்கள் எல்லாம்  சில நேரம் அவள்மேல் கோபம் கொண்டு வந்தாலும், மறுநிமிடமே அந்தக் கோபபம் போய்விடும். அவளின் மறுபுறம் மிகவும் இனிமையானது.  காதலில், காம வேட்கையில் விஜி அவனிடம் நடந்துகொள்ளும் விதம், அவள் அன்பில் அவனிடம் உளறியதெல்லாம் ஒரு முறை நினைத்துப்பார்த்தால் மோகன் குளிர்ந்துவிடுவான்.

 விஜி ரொம்ப சிம்பிள் கேரக்டர். அவளிடம் எல்லாமே அதிகம். கோபம், அன்பு, நட்பு, சந்தோஷம், காமம் என்று எதை எடுத்தாலும் அவளிடம் அளவுக்கு மீறி இருக்கும். நெருங்கிப் பழகிய பிறகு நண்பனான பிறகு அவனிடம் அவள் உடலையோ அல்லது உள்ளத்தையோ  மறைத்ததில்லை. அவள் அப்பா, அம்மா  நிறை குறைகள் பற்றிய விரங்களையும் அவனிடம் அவள் சொல்லிவிடுவாள். அவனை முழுமையாக நம்புவதிலிருந்தே,  அவள் மேல் அவன் நம்பிக்கை வைக்க கற்றுக்கொடுத்தவள் அவள். தன் வாழ்வில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் எதையுமே அவள் சொல்லாமல் விட்டதில்லை. தன் தோழிகளின் பரம ரகசியங்களையும் அவனிடம் சொல்லுவாள். ஒரு சில விசயங்களை அவள் சொல்லும்போது, "இதை எல்லாம் நீ சொல்ல வேண்டியதில்லை, விஜி" என்று மோகன் சொல்லியிருக்கான். இருந்தும் அவள், "உங்ககிட்டதானே சொல்றேன்" என்று எதையும் மறைக்க மாட்டாள். எப்போது அவளுக்கு முதல் "க்ரஷ்" வந்தது, யார்மேல் வந்தது, எந்த சொந்தக்கார அங்கிள் அவள் உடம்பில் வைக்ககூடாத இடத்தில் கை வைத்து தன் தரத்தைக் குறைத்துக் கொண்டார், முதன் முதலில் அவள் எப்படி மாஸ்டர்பேட் பண்ணினாள், என்பதைக்கூட அவள் அவனிடம் சொல்லி இருக்கிறாள். தன்னை முழுமையாகக் கொடுத்து, முழுமையாகக் காட்டி அவன் இதயத்தை வென்றவள், விஜி.

ஆனால் மோகன் அப்படியல்ல! ஒரு சில விசயங்களை விஜியிடம் சொல்ல மாட்டான். தன்னுடைய பெரிய தோல்விகள், தன் வாழ்க்கையில் அனுபவித்த பெரிய அவமானங்கள், தான் செய்த பெரிய முட்டாள்த்தனங்கள் போன்றவற்றை சொல்லத்தேவையில்லை என்று அவைகளை அவளிடம் சொல்லாமல் தவிர்த்து விடுவான். இப்போதுகூட, ரேச்சல் பற்றி, அவளை சந்தித்த விதம், அவளுக்கு அவன் கெமிஸ்ட்ரி ட்யூட்டரிங் செய்வது பற்றியெல்லாம் விஜியிடம் அவன் தெளிவாக ஒரு இ-மெயிலில் சொல்லியிருக்கலாம்.  எல்லாவற்றையும் தெளிவாக அவளுக்குப் புரியும்படி, அவள் புரிந்துகொள்ளும்படி கனிவாகச் சொல்லியிருக்கலாம். கவனமாக அனாலிசிஸ் செய்துபார்த்தால் விஜி ரொம்ப நல்லவள், மோஹன் ஒரு ஜெண்டில்மேன் மாதிரி நடிக்கும் ஒரு சாடிஸ்ட் என்றுகூட சொல்லலாம். அவளிடம் எதையும் தெளிவு படுத்தாமல விஜிக்குக் கோபம் வரவைத்து வேடிக்கை பார்ப்பவன் மோகன். ஏன் அப்படி? பொதுவாக ஆண்களே சுயநலக்காரர்கள்தான். காலங்காலமாக மரபியலாக வந்த ஆண் என்கிற கர்வம் அவர்களிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. எல்லா அயோக்கியத்தனமும் செய்துகொண்டு பெரிய மனிதன் போர்வையில் தத்துவங்கள் பேசிக்கொண்டு வாழ்வதுதான் ஆண் இனம்.

அவளுடைய அப்பார்ட்மெண்ட் கதவருகில் நின்று கொண்டு அவளை செல் ஃபோனில் கூப்பிட்டான். ரெண்டு ரிங் போனதும் டோர் பெல்லை அழுத்தினான். மறுபடியும் கால்ப் பண்ணி, அவள் மெசேஜில், "ஹே, நான் உன் வாசல்ல இருக்கேன்! கதவைத் திற!" என்றான்.

விஜி கதவைத்திறந்தாள் . அவன் உள்ளே சென்றதும் டோரை அடைத்துவிட்டு..

"வெல்? என்ன வேணும்?'

"உனக்கு என்னாச்சு? லூஸாயிட்டியா?"

"எனக்கா? I think I am sexually frustrated. My boyfriend does not give me a good fuck!"

"Really?" என்றான் அவன் சிரித்துக்கொண்டே.

"Yeah, That bastard is busy fucking his new girl friend!"

"ஏய் நான் சொல்றதை எதுவுமே நீ கேட்பதில்லை! நான் அவளுக்கு கெமிஸ்ட்ரி ட்யூட்டரிங் பண்ணுகிறேன்."

"ரியல்லி? பிஸைட்ஸ் ஃபக்கிங்?"

 அவன் விஜியின் அருகில் சென்று, அவள் நாடியை மிருதுவாகப் பிடித்து தன் புறம் திருப்பினா. அவள் வலது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். அவள் காதுகளை கைகளால் மெதுவாக வருடி, அவள் உதட்டில் தன் இதழ்களை பொருத்தினான். விஜி சிலையாக நின்றாள். அவளுக்கு அந்நேரம் அவனிடம் இருந்து "இவை"யெல்லாமே தேவைப்பட்டது.

-தொடரும்

 தொடர்புடைய பதிவுகள்!

2 comments:

கவியாழி said...

ஆனந்தமாய் தொடர வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள்... தொடர்கிறோம்....