Thursday, August 15, 2013

கோடங்கி தளம் இக்பால் செல்வன் மறைந்துவிட்டாரா?

இக்பால் செல்வன் என்கிற பதிவர் ஒரு வலைதளம் ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருந்தார். கனடாவிலிருந்து எழுதுகிறேன் என்பார். சென்னைதான் தன் சொந்த ஊர் என்பார். இவர் ஒரு நாத்திகர். இஸ்லாமியர் அல்ல! இஸ்லாம் மேல் உள்ள காதலால் "இக்பால்" ஆனேன் என்றார். திடீர்னு டொரொண்டோவில் ஃபெட்னா நடந்த சமயத்திலிருந்து இவர் பதிவுலகில் இருந்து மறைந்துவிட்டார் ! சரி, அவர் மறைந்தார் பரவாயில்லை,  அவர் தளமும் மறைந்துவிட்டது!!

என்ன நடக்கிது இங்கே???

When you go to  http://www.kodangi.com/

It says this DOMAIN is FOR SALE? Is this some kind of business he is doing???

இவர் வந்த புதிதில் ஏற்கனவே இதேபோல் ஒரு தளம் (கோணங்கியோ என்னவோ? )  நடத்தியதாகவும், அதை யாரோ முடக்கிவிட்டாதாகவும், புதிதாக இந்த "கோடங்கி" ஆரம்பித்துவிட்டதாகச்  சொல்லிக்கொண்டு இருந்தார்.
 இவருக்கு மூத்த பதிவர் தருமி மொதல்க்கொண்டு பல நாத்திக நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு இவரைத் தனிப்பட்ட முறையில் பர்சனலாகத் தெரிந்தும் இருக்கலாம்.

என்ன ப்பா நடக்குது? திடீர்னு ஒருத்தர் வர்ராரு. ஒரு நாளைக்கு 2 பதிவு எழுதுறாரு. பதிவுலகில் பல நண்பர்களை சந்திக்கிறார், நட்பு பாராட்டுகிறார். திடீர்னு இருந்த சுவடே தெரியாமல்  மறைந்துவிட்டார். அதைவிட மர்மம் என்னனா அவரோட தளத்தையும் காணவே காணோம்!!! அதைவிடக் கொடுமை என்னனா என்னைத் தவிர யாருக்குமே அப்படி ஒரு ஆள் இருந்தாரா என்னனு ஞாபகம் இருக்குமா என்னனு தெரியவில்லை!

கோடங்கி தளம் பற்றி எனக்கு ஏதாவது விபரம் சொல்லுங்க.

நம்ம நண்பர், இக்பால் செல்வன் என்ன ஆனாரோ? உயிரோடதான் இருக்காரா? என்கிற கவலையில் நான் வாடுகிறேன். தயவு செய்து இக்பால் செல்வனுடைய நெருங்கிய  நண்பர்கள் எனக்கு ஆறுதல் தரும் வகையில் நல்ல பதில்கள் ரெண்டைச் சொல்லவும்!

30 comments:

Avargal Unmaigal said...

நீங்கள் நம்புவீர்களோ நம்மமாட்டீர்களோ நேற்றுதான் அவரின் ஞாபகம் வந்தது அவரை நானும் தேடினேன் இதில் பெரிய கூத்து என்னவென்றால் இவர் பதிவு எழுதியே பல மாதங்கள் ஆகிவிட்டன ஆனால் இவர் தமிழ்மணத்தில் 16வது இடத்தில் இருக்கிறார் . நீங்க தமிழ் மண ரேங்க் பற்றிய பதிவு இட்டதால் அதில் இவர் இருக்கிறாரா என்று பார்த்த போது இது தெரியவந்தது


தமிழ்மண ரேங்க் என்பது இப்பொது கேலி கூத்தாக இருக்கிறது என்பதை இதைபார்த்தாலே தெரிகிறது

நன்னயம் said...

அவரது வெப்சைட் க்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
ஆனால் twitter இல் இருக்கின்றார்

வருண் said...

***Avargal Unmaigal said...

நீங்கள் நம்புவீர்களோ நம்மமாட்டீர்களோ நேற்றுதான் அவரின் ஞாபகம் வந்தது அவரை நானும் தேடினேன் இதில் பெரிய கூத்து என்னவென்றால் இவர் பதிவு எழுதியே பல மாதங்கள் ஆகிவிட்டன ஆனால் இவர் தமிழ்மணத்தில் 16வது இடத்தில் இருக்கிறார் . நீங்க தமிழ் மண ரேங்க் பற்றிய பதிவு இட்டதால் அதில் இவர் இருக்கிறாரா என்று பார்த்த போது இது தெரியவந்தது


தமிழ்மண ரேங்க் என்பது இப்பொது கேலி கூத்தாக இருக்கிறது என்பதை இதைபார்த்தாலே தெரிகிறது***

என்னங்க இது!!!

தளத்தில் உள்ள பதிவுகளையும் பின்னூட்டங்களையும் எல்லாம் யாரு சாப்பிட்டது?

I thought our posts and responses will live even after our death.

கவியாழி said...

நண்பரைப் பற்றி நல்ல செய்தியாய் வரட்டும்

வருண் said...

***Ethicalist E said...

அவரது வெப்சைட் க்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
ஆனால் twitter இல் இருக்கின்றார்***

I read your conversation in twitter AFTER MY POST was PUBLISHED.

Who knows may be he is around here in some other name and will start a new blog and then sell the domain after a while like he does now..

வருண் said...

*** கவியாழி கண்ணதாசன் said...

நண்பரைப் பற்றி நல்ல செய்தியாய் வரட்டும்***

twitter ல "நல்லாத்தேன் இருக்கேன்" சொல்கிறார்.

தளத்தில் உள்ள பதிவுகளை எங்கே கொண்டுபோயி கொட்டினார்னு தெரியலை. இப்போ ஏதோ நாலு "விளம்பரம்" மட்டும்தான் இருக்கு (ஆங்கிலத்தில்)..அவர் நல்லாத்தான் இருப்பாரு.. நம்மதான் இந்த மாரி ஆட்களை பார்த்துட்டு ஒண்ணும் புரியாமல் பித்துப்பிடிச்சு அலையணும்.

Rizi said...

எங்கே ஆளைக்கானோம்னு நானும் இவரைத்தேடியிருக்கேன்..

அவரின் பதிவுக்கு முதல் ஆளாய் சலாம் போடும் நம்ம நாத்திக திலகம் சர்வாகனுக்கு தெரியுமோ என்னவோ..

நம்ம எதிகாலிஸ்ட் மச்சானுக்கும் தெரியவில்லையாமே என்னடா இது மர்மமா இருக்கே..

கலாகுமரன் said...


https://twitter.com/iqbalselvan


சில பிரச்சனைகளால் எழுதுவதில்லை மீண்டும் வருவதாக குறிப்பிட்டுக்கிறார் tweet reply @Ethicalist

Unknown said...

சகோ.வருண் !

இக்பால் செல்வன் இல்லாதது எனக்கும் வருத்தமாக உள்ளது..! அவருடைய பேஸ் புக் பக்கமும் முடங்கி உள்ளது...இணைய தளமும் பெஸ்புக்கும் முடங்கினால் இது அவரது முடிவாகத்தான் இருக்கும் ...ஒரு வெப்சைட்டை அவராகவே ப்ளாக் செய்யும் அளவுக்கு என்ன வந்தது ..! உள்ளத்தின் மாற்றத்தை தவிர வேறு எந்த துன்பமாகவும் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் !! ரிசி சொல்வதை போல அவரது நெருங்கிய கூட்டாளிகள் சொன்னால் தான் உண்டு !

Raja said...

பாஸ்,
இது உங்களுக்கு இக்பால் செல்வன் மீது உள்ள வெறுப்பையே காட்டுகிறது.

His site is a parked domain meaning, he has not renewed his site hence the domain is up for sale now. He is not selling his domain and it is by service provider.

அவர்மீது உள்ள வெறுப்பால் எதையாவது உளறாதீர்

ராஜா

நன்னயம் said...

"நம்ம எதிகாலிஸ்ட் மச்சானுக்கும் தெரியவில்லையாமே என்னடா இது மர்மமா இருக்கே.."

உங்களுக்கு, அல்லது உங்க ஆட்களுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கணுமே ......................
உங்க ஆட்கள் தான் ரொம்ப நாளா வேவு பார்த்திகிட்டு இருந்தாங்க

நன்னயம் said...

"Who knows may be he is around here in some other name and will start a new blog and then sell the domain after a while like he does now.."

no comments

Mahesh said...

nanum kavanichitte vanthen 3 month mela akirathu pathivu ezuthi avar. sari avaroda palaya pathiva padikkal pona blog open akala.

எருமை said...

அவர் அப்பப்ப நான் விடை பெறுகிறேன் என்று சொல்லிட்டூ போவாரு,சிறி து நாள் கழிச்சு பதிவிடுவாறு. அப்படி எதுவும் இருக்குமோ? பரவாயில்ல காணம போனாலும் வரூண் மாதரியான நல்ல உள்ளங்கள் இருப்பது ஆறுதலாக இருக்கு நன்றி! வருண் அவர்களே!

Ovian said...

http://kodangipost.blogspot.ae/

Rabbani said...

அவர் முன்பு கொடுக்கி என்ற Domain இல் நிறைய பதிவு போட்டார் திடீர் என தூக்க மின்மை யால் அவதி படுவதாக ஒரு பதிவு போட்டார் பின்பு கொஞ்ச காலம் கழித்து அந்த தளம் காணாமல் போயி விட்டது பின்பு திடீர் என கோடங்கி யின் மூலம் வந்தார் இப்போம் காண வில்லை

Mahesh said...

வருண் avarkli vanakkam. indru kalai pathivar igbal selva parti pathivu pottu irunthinga. athai padikka vantha nan appadiye unga palaya pathivukalai just parkka aarampiththen. rompa acharyamaka irunthathu 2008 la irunthu ezuthuringa.
appo enathu paarvaiyil (காதலுடன் ) appadingkura oru thodra parthen.

sari padikka aarampiththen nalla romantic ka poyi kittu irunthichu.


oru stage suddenly
காதலுடன் -17 pakuthya padikka mudiya villai..



next enna achu
அடுத்த வாரம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோம் appadinu 2 perum mudivu edutha piraku 17 part kanom...

please..

if i miss remain part please post the links in comment box.
other wise ninga ezuthalina

please antha thodarai ezuthi mudikkavum please..



வருண் said...

***Raja said...

பாஸ்,
இது உங்களுக்கு இக்பால் செல்வன் மீது உள்ள வெறுப்பையே காட்டுகிறது.

His site is a parked domain meaning, he has not renewed his site hence the domain is up for sale now. He is not selling his domain and it is by service provider.

அவர்மீது உள்ள வெறுப்பால் எதையாவது உளறாதீர்

ராஜா***

Raja: I never paid for any site. So, it is my ignorance. I apologize for the "misleading" statement.

Saha, Chennai said...

தொடர்ந்து எழுதி சலிப்படைந்ததால் twitter தவிர மற்ற அனைத்திலும் எழுதுவதை நிறுத்திவிட்டதாக சொல்லி இருந்தார். இருந்தாலும் அவரது தளத்தில் முறையாக அதை அறிவித்திருக்கலாம். ஒரே நாளில் பதிவுலகிலும், twitter தவிர அனைத்து சமூக வலைத்தளங்களிலும் செயல் படுவதையும் (தற்காலிகமாக) நிறுத்திவிட்டார்.

மீண்டும் வருவார் என்று நம்புவோம்.

வருண் said...

***mahesh said...

வருண் avarkli vanakkam. indru kalai pathivar igbal selva parti pathivu pottu irunthinga. athai padikka vantha nan appadiye unga palaya pathivukalai just parkka aarampiththen. rompa acharyamaka irunthathu 2008 la irunthu ezuthuringa.
appo enathu paarvaiyil (காதலுடன் ) appadingkura oru thodra parthen.

sari padikka aarampiththen nalla romantic ka poyi kittu irunthichu.


oru stage suddenly
காதலுடன் -17 pakuthya padikka mudiya villai..



next enna achu
அடுத்த வாரம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோம் appadinu 2 perum mudivu edutha piraku 17 part kanom...

please..

if i miss remain part please post the links in comment box.
other wise ninga ezuthalina

please antha thodarai ezuthi mudikkavum please..***

மஹேஷ்: நீங்க என்ன முடிந்த கதையை எல்லாம் தோண்டி எடுத்து இன்னும் முடியலைனு சொல்றீங்க. சரி, புதுசா எல்லாத்தையும் அள்ளிக் கொட்டியிருக்கேன். அதைப் படிச்சு முடிவைத் தெரிஞ்சுக்கோங்க! :)

ராவணன் said...

கோடங்கி.....இக்பால் செல்வன் ..என்பது ஒரு குரூப். தனிநபர் அல்ல.
எதற்காகப் பிரிந்தார்கள்...எதற்காக மூடினார்கள் என்பதை உங்கள் ஊகத்திற்கே விடுகின்றேன்.

வருண் said...

*** ராவணன் said...

கோடங்கி.....இக்பால் செல்வன் ..என்பது ஒரு குரூப். தனிநபர் அல்ல.
எதற்காகப் பிரிந்தார்கள்...எதற்காக மூடினார்கள் என்பதை உங்கள் ஊகத்திற்கே விடுகின்றேன்.***

நான் நினைத்ததுபோலவே "ராவணன்" ஒரு பெரிய ஆள்தான்!!!

உங்களுக்கு எவ்ளோ விடயம் தெரிந்து இருக்கு!!!

ராவணன் said...

////வருண் said...

*** ராவணன் said...

கோடங்கி.....இக்பால் செல்வன் ..என்பது ஒரு குரூப். தனிநபர் அல்ல.
எதற்காகப் பிரிந்தார்கள்...எதற்காக மூடினார்கள் என்பதை உங்கள் ஊகத்திற்கே விடுகின்றேன்.***

நான் நினைத்ததுபோலவே "ராவணன்" ஒரு பெரிய ஆள்தான்!!!

உங்களுக்கு எவ்ளோ விடயம் தெரிந்து இருக்கு!!!/////


இதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய இக்கன்னா வைக்கனும்? கேலிதானே...?

வருண் said...

கேலி எல்லாம் இல்லை! உங்க திறமை மேலே பொறாமையாக் கண்டா இருக்கலாம்! நான் இந்த "பாஸிபிலிட்டியை" யை யோசிச்சதே இல்லை. இப்போ யோசிச்சுப்பார்த்தால், அபப்டித்தான் இருக்கணும்னு தோணுது!

"Iqbal selvan" had never looked like a normal human being with emotions of humans. "He" was so weird as he was cloned with "several human genes"!

It all make sense now, Ravanan! :)

Anonymous said...

சகா. வருணுக்கு என் மேல் எவ்வளவு பாசம்.. யாரும் மறந்தாலும் நீங்கள் மறக்க மாட்டீங்க.. !

எல்லோருக்கும் எனது மன்னிப்புக்கள். சில பணி நிமித்த காரணமாக வேறு நாடுகள் சிலவற்றுக்கு சென்றேன். எந்த நாடு என சொல்ல வேண்டுமா ?!

இதற்கிடையில் எனது டொமைன் பணம் செலுத்த இயலாதத்தால் காலவதியாகி விட்டது. டொமைன் விற்க வேண்டிய அவசியமோ, அந்தளவுக்கு வியாபார காந்தமோ நானில்லை.

எனது பழைய பதிவுகள் .. டொமைன்யற்ற

http://kodangipost.blogspot.py/

இந்த தளத்தில் உள்ளது..

எனது சமூக தளமான ட்விட்டரில் இயங்கு நிலையிலேயே உள்ளேன்.

https://twitter.com/iqbalselvan

மீண்டும் என்னை பதிவுலகில் காண ஆசைப்பட்டு நிறைய பேர் உள்ளார்கள் போலும் ஏன் உங்களை ஏமாற்றுவேன். விரைவில் வருகின்றேன் சகா.

உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி !

:)))

வருண் said...

***இக்பால் செல்வன் said...

சகா. வருணுக்கு என் மேல் எவ்வளவு பாசம்.. யாரும் மறந்தாலும் நீங்கள் மறக்க மாட்டீங்க.. !***

வாங்க, இகபால் செல்வன்! நான் யாரையுமே எளிதில் மறப்பதில்லை! உங்களை எப்படி மறக்க முடியும்?

நான் ட்விட்டரில் இல்லை! அதனால் அதில் நீங்க செயல்படுவது தெரியாது. திடீர்னு நீங்க மறைந்தால் ஒண்ணுமில்லை! திடீர்னு தளத்தையே காணோம்னா என்ன பண்ணுறது??

நீங்க எங்கிருந்தாலும் வாழ்க! :)

வருண் said...

///எனது பழைய பதிவுகள் .. டொமைன்யற்ற

http://kodangipost.blogspot.py/

இந்த தளத்தில் உள்ளது.. ///

நீங்க கொடுத்த இந்தத் தொடுப்பு எனக்கு வேலை செய்யவில்லை!

கூகில்க் காரன் ப்ளாக்ஸ்பாட் எல்லாம் இன்னும் எங்களைப்போல் ஏழைகளுகளுக்காக ஃப்ரீயாத்தானே தர்ரான்? ஏன் இப்படி பணத்திமிரில் பெரிய முயற்சி எடுத்துவிட்டு..இப்போ "காசு இல்லை". டொமைன் போயிடுச்சு னு பஞ்சப்பாட்டுப் பாடுறீங்கனு வெளங்கவில்லை!

வருண் said...

இந்தத் தொடுப்பு வேலை செய்யுது.

http://kodangipost.blogspot.com/

அதைக்கூட ஒழுங்காக் கொடுக்க முடியாமல் என்ன கஷ்டமோ உங்களுக்கு! :( Take care of yourself, IS!

Anonymous said...

எனக்கு என்னவோ வருணும், இக்பால் செல்வனும் ஒரே ஆளாக இருக்கும் போல தோன்னுது. இணைவ வெளியில் எதுவும் சாத்தியம். யாருக்குத் தெரியும் ?! அப்படி இல்லை எனில் இருவரும் ஒரே கேங்கில் இருந்து பின்னர் பிரிந்தவராக இருக்கக் கூடும். என்றை அச்சோ !!!

வருண் said...

***நிரஞ்சன் தம்பி said...

எனக்கு என்னவோ வருணும், இக்பால் செல்வனும் ஒரே ஆளாக இருக்கும் போல தோன்னுது. இணைவ வெளியில் எதுவும் சாத்தியம். யாருக்குத் தெரியும் ?! ***

நீங்களும் இக்பால் செல்வனும் ஒருவரேனு கூட ஒரு சிலர் என் காதைக் கடிக்கிறாங்க.. அதுக்காக அவங்க சொல்றதை நம்பி உங்களை என்னால் தவறாக நினைக்க முடியுமா?
மனிதனைன் கற்பனையை யாரும் தடுக்க முடியாது. உண்மை என்னவென்று எனக்கும், இக்பால் செல்வனுக்கும், நிரஞ்சன் தம்பிக்கும் மட்டுமே தெரியும் நண்பரே!! மறந்திட்டேனே..ஆமா நம்ம பகவானுக்கும்தான்! :)))