Sunday, April 6, 2014

உன் நண்பன் துரோகியானால் நீ காலிடா மகனே!

இதைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கேனா என்னனு தெரியவில்லை.எழுதி இருக்கேன் னுதான் தோணுது. பதிவுலகில் ஜ்யாவரம் சுந்தர் மற்றும் பைத்தியக்காரன் சிவராமன் என்கிற பதிவர்கள் பற்றி  ரொம்ப நாள் குப்பை கொட்டுபவர்களுக்குத் தெரியும். இவர்கள் நல்ல பதிவர்கள் மற்றும் நண்பர்களாக ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தவர்கள் . ஆனால் ஒருமுறை இவர்கள் இடையில் ஏற்பட்ட ஒரு சின்ன மனக்கசப்பால், நண்பர்களாக இருந்த இவ்விருவரும் எதிர் எதிர் தரப்புக்கு போய்விட்டார்கள்.  அப்படிப் போனாலும் பரவாயில்லை! எதிரியான பிறகு  டாஸ்மாக்கில் போயி உக்காந்துக்கிட்டு ஒருவரை ஒருவர் கெட்டவார்த்தை சொல்லி  திட்டியிருந்தாலாவது அது "அல்கஹால்"போலவே  எளிதாக "எவாப்பரேட்" ஆகிப் போயிருக்கும். அப்படிச்செய்யாமல் அவர்கள் சண்டை பதிவுலகிலும் அரங்கேறியது. அப்பொழுது ஒரு நண்பரால்  இன்னொருவருடைய தாக்குதலை சமாளிக்கவே முடியவில்லை! ஒரு நண்பன் உன் எதிரியாகும்போது அவன் பலம் ஆயிரம் மடங்காகிறது. ஆதலால்தான் "இந்த புது எதிரி"க்கு அந்நண்பனால் "துரோகி" என்கிற பட்டம் கொடுக்கப் படுகிறது. உன்னுடைய வீக்னெஸ் எல்லாவற்றையும் தெரிந்த எதிரி உன் பழைய நண்பன் என்பதால் அவன்  பலம் பலமடங்காகிறது. எனிவே மறுபடியும் இந்த முன்னால் நண்பர்கள் சுந்தர் மற்றும் சிவராமன் இப்போது பழசையெல்லாம் மறந்து நண்பர்களாகி இருக்கலாம். எனக்கு இது பற்றிய "அப்டேட்" தெரியவில்லை! ஆனால்  அவர்களுக்குள் அந்தப் பதிவுலக உரசல் நடந்தபோது பதிவான பதிவுகள், அந்நினைவுகள் என் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை!

இதெல்லாம் நமக்குப் புதிதல்ல! புராணங்களிலும், இதிகாசங்களிலும்கூட இவைகள் இருக்கலாம்தான். இருந்தாலும் இப்பாடத்தை நான் திரும்பத் திரும்ப படிக்கத்தான் செய்கிறோம். கெளரவம்  சினிமாவில்கூட வளர்ப்பு மகன் "கண்ணன்", "பாரிஸ்டர் ரஜினிகாந்த் " நட்பிலிருந்து விலகி அவரின்  எதிரியாகும்போது பச்சை துரோகியாகிறான். ரஜினிகாந்தை எளிதில் வீழ்த்தக் கூடிய சகதியுள்ள மிகப்பெரிய பலசாலியாகவும் ஆகிறான்.

கெளரவம் பெரியப்பா ரஜினிகாந்த்,  வளர்ப்புமகன் கண்ணன்
பாசமான பெரியம்மா, பாரிஸ்டர் பெரியப்பா (கெளரவம்)


இதேபோல், ஈழவிடுதலைப் புலிகள் தளபதியாக இருந்த கர்ணா என்பவர், புலிகள் தலைவரான பிரபாபாகரனிடம்  ஏற்பட்ட மனக்கசப்பால் இருந்த நட்பை உடைத்துக்கொண்டு  வெளியேறியதால் ஏற்பட்ட விளைவுகள் நம் அனைவருக்கும் தெரியும். கர்ணாவை தமிழர்கள் அனைவருமே துரோகி என்றுதான் கூசாமல் சொல்கிறோம். ஆனால் கர்ணா தன்தரப்பில் உள்ள "நியாத்தையும்" எடுத்து வைத்து "நியாயப்படுத்த" முயலத்தான் செய்தார். கர்ணாவின் "கதைகளில்" உண்மையே ஓரளவுக்கு இருந்தாலும் அவர் செய்த இச்செயலால் ஏற்பட்ட அகோர விளைவுகளால், அவரை தமிழின துரோகி என்றுதான் வரலாறு சொல்லப்போகிறது.

So, why do you respect your friend? (நண்பனை ஏன் மதிக்கணும்?)

Why do you have to respect "friendship"?  (நட்பு ஏன் உயர்தரமானது?).

 If you rationally analyze this, it is not sentiments as people claim, It is strictly business! Because you are a dead meat when your close friend becomes your enemy! So, treat him fairly ALWAYS!

 அதாவது உன் நண்பன் துரோகியானால்/எதிரியானால் அவன் உன்னைவிட பலமடங்கு சக்திவாய்ந்தவானகிவிடுவாதால் உன் கதி அதோ கதிதான்! தயவு செய்து நட்பு பாராட்டுங்கள்- இது உங்களுக்கு நீங்களே செய்யும் சுயநலச் சேவை. வேறொன்றும் இல்லை! :-)

No comments: