Wednesday, May 14, 2014

காயத்ரியின் பகல்கனவு! (ஸ்ட்ரிக்ட்லி வயதுவந்தவர்களுக்கு மட்டும்!)

காயத்ரிக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம்  ஆகிறது. வருடங்கள் போனதே தெரியலை. இப்போ எல்லாம் ஹரி அவளை சரியாக் "கண்டுகொள்வதே" இல்லை.

"ஆமா, நல்லா டி வி பாருங்க, ஸ்போர்ட்ஸ் பாருங்க, "எல்லாம்" பாருங்க! என்னையும் கொஞ்சம் கண்டுக்கிறதுதானே?" னு மனதுக்குள்ளே புலம்பிக்கொண்டு கவர்ச்சியா மினி ஸ்கேர்ட் டுடன், ஒரு ரிவீலிங்கா டாப்ஸும் போட்டுக்கொண்டு வந்து டி வி பார்த்துக் கொண்டிருந்த கணவன் ஹரி அருகில் அமர்ந்தாள் காயத்ரி.

"ஏன்டி இந்த வயசுல இப்படி அலையிற?" ங்கிறமாதிரி ஏதோ வினோதமாக அவளைப் பார்த்தான் ஹரி. பக்கத்தில் உக்காந்ததால் பேருக்கு அவள் கன்னத்தில் ஒரு முத்தம். அதைக் கொடுக்காமல் இருந்தாலே பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு. இந்த ஊரில் உள்ள அமரிக்கர்கள் மனைவியிடம் ஃபோன் பேசிட்டு மறக்காமல் "ஐ லவ் யு" சொல்லிட்டு வைக்கிற மாதிரி இருந்தது அவளுக்கு.

இந்தியாவில் இருக்கும்போது நல்லாத்தானே இருந்தாரு, ஒரே ரொமாண்டிக்கா! அமெரிக்கா வந்து ஒரு நாலு வருஷம்தான் ஆகுது. அதிலிருந்து வேலை அதிகம், பையனா பார்த்துக்கனும்னு போனதுனாலேயே என்னவோ தெரியல, ஒண்ணும் பெருசா ரொமான்ஸே இல்லை. ஒரே ஒரு பையன்தான், அவனும் இப்போ வீட்டில் இல்லை, ஸ்கூல்ல ஏதோ கேம்ப்க்கு போயிட்டான். அவன் திரும்பி வீட்டுக்கு வர நாலு நாள் ஆகும். இப்போதைக்கு ப்ரைவஸிக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை, நெறையாவே இருக்கு. ஆனால் இவர்மட்டும் ஏன் இப்படி ஜடமா இருக்கிறார்? ஒருவேளை  இவருக்கு டெஸ்டாஸ்டீரோன் லெவெல் கொறைஞ்சிருச்சா? என்னனு தெரியலை. இல்லைனா இந்தியாவிலே மாதிரி இவருக்கு ஆளும் பேருமா கூட்டமா இருந்தாத்தான் இவருக்கு மூடு வருமா? இதையெல்லாம் அவரிடம் வெளிப்படையாக் கேட்டு டிஸ்கஸ் பண்றதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது. அவளா அவரைப் புரிஞ்சுக்கனும்! இந்த நாலு நாள்ல இவரை ஏதாவது ஒரு வழி பண்ணியே ஆகனும்னு ஒரு முடிவுக்கு வந்தாள்.

"நான் இந்த அவ்ட்ஃபிட்ல செக்ஸியா இருக்கேனா?" என்று கடைசியில் அவளே அடக்கமுடியாமல் கேட்டுவிட்டாள். அப்படிச் சொல்லி அவன் அருகில் நல்லா உரசுராப்பில உக்காந்து கணவனை செட்யூஸ் பண்ண ட்ரை பண்ணினாள், காயத்ரி. ஹரிக்கு என்னமோ அந்த அரைகுறை ட்ரெஸ்ல அவளைப்பார்த்து ஒண்ணும் உணர்ச்சியெல்லாம் பொங்கி வரலை, ஆனால் அவள் தேவையை புரிந்துகொண்டு, ஏதோ கடமையைச் செய்வதுபோல போனது அன்று இரவு.

காயத்ரிக்கு கடமைக்காக காதலோ, காமமோ சுத்தமாக பிடிக்காது. வாரம் ஒருமுறையானாலும், ஏன் மாதம் ஒரு முறையானாலும் பரவாயில்லை, ஆனால் ஹரி அவகிட்ட வந்து நல்லா வழியனும், அவளையும் அவள் அழகையும் அப்படி இப்படி அனுபவிச்சு பார்த்து ரசிக்கனும், அவன் பார்க்கும் பார்வையிலே அவளுக்கு உடம்பில் நெறைய கெமிக்கல் ரியாக்ஷன் நடக்கனும். அப்புறம் அவளை திடீர்னு கட்டி அணைச்சு அவ இடுப்பில், உதட்டில், மார்பில், கழுத்தில் எல்லா எடத்துலயும் கிஸ் பண்ணி அவளை அவன் மெய் மறக்க வைத்து, ஒரு சின்ன ஆர்கஸம் அவளுக்கு வருமளவுக்கு முத்தம் கொடுத்து அவ மூடை ஏத்தி அவளை ரெடியாக்கனும்! அது மாதிரி அன்புதான் காய்த்ரிக்கு வேணும். அதுதான் அவளுக்குப் பிடிக்கும். அதெல்லாம் அமெரிக்கா வந்தபிறகு நடந்தமாதிரியே இல்லை. இப்போ அந்த ஆசையெல்லாம் அவளுடைய பகல்கனவு மாதிரி ஆயிடுத்து. அவள் கனவை நனவாக்காமல் ஏதோ இதுவும் ஒரு வேலை போல் அவன் செய்வதால் ஹரிமேலே எரிச்சலும் கோபமுமாத்தான் வந்தது அவளுக்கு.

அடுத்தநாள் ஃப்ரெண்ஸ்ட்ட லேடீஸ் நைட் அவுட் ல இதைப்பத்தி பட்டும் படாமலும் நாசூக்காக பேசினாள். "நீ ஒண்ணும் கவலைப்படாதே! இங்கேயும் அதே கதைதான்" என்று சிரித்தாள்கள் தோழிகலெல்லாம். அப்போத்தான் புரிந்தது, வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போலனு. அவ்ளோதானா? காதல், காம வாழ்க்கை எல்லாம் அதுக்குள்ள முடிஞ்சதுபோல என்று ஒரே கவலை அவளுக்கு. ஆனால், அவள் தன்னைத்தானே அவள் பாத்ரூமில் கண்ணாடியில் பார்க்கும்போது இன்னும் அழகா எடுப்பா, கவர்ச்சியாத்தான் இருந்தாள். அதை உறுதிப்படுத்துவதுபோல வொர்க்ல, ஷாப்பிங் போகயிலே எல்லாம் நெறையவே அட்டன்ஷன் கெடச்சது, காயத்ரிக்கு. நேத்துக்கூட ஒரு கடையில் உள்ள செக் அவுட்ல உள்ள டெல்லர் அவளை அப்படி ஒரு பார்வை பார்த்தான். தேவையே இல்லாமல் அவளிடம் வழிஞ்சான். காயத்ரிக்கு எரிச்சல்தான் வரும் கண்டவனும் தன்னை அளவுக்கதிகமா பார்க்கிறது, தன்னுடன் தேவையே பேசுவது இதெல்லாம். கல்யாணம் ஆனவள்னு இதுகளிடம் சொல்ல "ரிங்"கா போட்டுக்கொண்டு அலையமுடியும்? என்று தனக்குள்ளே திட்டிக்கொள்வாள்.

ஃப்ரெண்டு ஒருத்தி ஏதோ ஐடியா கொடுதாள்னு ஒருமாதிரி விக்டோரியா சீக்ரட்ஸ் போயி, புதுசா ஒரு ஸ்பெஷல் பேண்டிஸ் ஒரு பேரை வாங்கி வந்திருந்தாள் காயத்ரி. அன்று சனிக்கிழமை, கீழே பேஸ்மெண்ட்ல லாண்ட்ரி போடும்போது அரைகுறையா ஒரு சின்ன ஸ்கேர்ட் மட்டும் போட்டுக்கொண்டு உள்ளே அந்த புது பேண்டிஸை போட்டு இருந்தாள். வேணும்னே பழைய க்ளோத்ஸை ட்ராப் பன்ணிட்டு எடுப்பதுபோல் உட்கார்ந்தாள். அவளுக்கு உதவ எதிர்புறமாக உட்கார்ந்து துணிகளை எடுத்த ஹரி, அவளையும், அவள் உள் ஆடையையும் நல்லாவே கவனித்தான்.

"என்ன காய்த்ரி பேண்டிஸ் கிழிஞ்சி இருக்கு? நல்லது எதுவும் இல்லையா? இதிலேகூட சிக்கனமா? நாளைக்கு போய் ஒரு டசன் எடுத்துண்டு வரலாம்" என்றான் விபரம் புரியாமல்.

"உங்களை என்ன பண்றது?", னு நினைத்துக் கொண்டாள் மனசுக்குள்ளேயே. "இது புது பேண்டிஸ்தான்யா மக்கு" னு ஹரியிடம் விளக்கம் சொல்ல அவளுக்கு இஷ்டமில்லை.

அடுத்த நாள் எரிச்சலும் கோபமுமா இருந்தாள். வாஷிங் மெஷினில் ஏதோ கோளாறுன்னு அவள் போட்டுக்க ஒண்ணும் மாட்டாமல் ஷூட்கேஸ்ல தேடி ஒரு பழைய சேலையையும், அதுக்கு மேட்சிங் ப்ளவ்ஸையும் மாட்டிக்கொண்டு இருந்தாள். நல்லவேளை ப்ளவ்ஸ் சைஸ் இன்னும் அவளுக்கு ஃபிட் ஆவதுபோல சரியா இருந்தது. அமெரிக்கா வந்ததிலிருந்து மாடர்ன் ட்ரெஸ்தான் இப்போலாம் காயத்ரிக்குப் பிடிக்கும். சேலையெல்லாம் இந்தியாவிலே கட்டியதுதான். அந்த சேலையை உடம்பெல்லாம் மாட்டிக்கொண்டு திரியிறது சுத்தமா பிடிக்காது, காயத்ரிக்கு.

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்ல உக்காந்து முக்கியமான ப்ராஜக்ட் ஒண்ணுல சீரியஸா வேலை செய்துகொண்டிருந்த ஹரிட்ட அவசரமாக காஃபியை கொண்டுவந்து கொடுத்தாள்.

"என்ன காலையிலே வேற அவுட்ஃபிட் போட்டிருந்த, திடீர்னு சேலையில் இருக்க?" னு விசாரித்தான் ஹரி.

"ஆமா, புது வாஷிங் மெஷின் வாங்கனும் போல. இது அவ்வளவுதான். கரெக்ட்டா என் ட்ரெஸ் எல்லாத்தையும் போடும்போது மெஷின் போயிடுத்து. வாரண்ட்டி இருக்குனு கால் பண்ணினால் சர்விஸ்க்கு ஆட்கள் நாளைக்குத்தான் வருவார்களாம்! அதான் இந்த சேலையை உடம்புமுழுவதும் சுத்திக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு" என்றாள் எரிச்சலாக.

"இங்கே வா உன்னிடம் முக்கியமான ஒண்ணு கேக்கனும்" னு அவளை கையைப்பிடிச்சு பக்கத்தில் இழுத்தான் ஹரி.

"அடுப்புல பால் இருக்கு, விடுங்க" என்று ஓடிப்போயி அடுப்பில் இருந்ததை கவனித்தாள். அவளுக்கு இன்னும் புரியலை.

"ஹேய் காயத்ரி! இழுத்துப்போத்தினால்தான்டி நீ பயங்கர செக்ஸியா இருக்க !" னு அவள் காதருகில் முனுமுனுத்தான். அவள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து பின்னால் இருந்து கட்டி அணைத்தான். அவள் கழுத்தில் அவன் இதழ்கள் பதிந்தது. என்றும் போலில்லாமல் வித்தியாசமாக அவனுடைய முத்தங்கள் சத்தமாகவும் அவள் உடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. அவன் கைகள் அவள் உடம்பில் தெரிந்த எல்லா "கேப்" களிலும் ஊர்ந்தது, பிறகு கைகளை அவன் உதடுகளும் ஃபாளோ பண்ணின. காய்த்ரி ஸ்ட்வை ஆஃப் பண்ணினாள் . ஸ்டவ்வில் உள்ள நெருப்பு அணைந்தது, ஆனால் அவன் கொடுக்கும் முத்தத்தால் அவள் உடல் கொதித்தது, பொங்கியது. அதன்பிறகு அவள் எதுவும் பெருசா பேசவில்லை. இன்று என்னவோ புதுமாதிரியாக அவளுக்கு வழங்கும் அன்புடன் அவன் அவளை ஹீரோயினாக வைத்து ஒரு கதையும் சேர்த்துச் சொன்னான். ரொம்ப ரொம்ப மோசமான கதை அது. ஆனால், அதுதான் அவளை எளிதாக அவனுக்கு முன்னால் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது . எவ்வளவு நாளாச்சு இப்படி இவர் "அன்பா" இருந்து!

ஷவரில் குளித்துக்கொண்டிருக்கும்போது இன்பத்தில் ஆழ்த்திய ஹரியை நினைத்தாள், "யாரையும் கேட்டால், இவர் ஒர் பக்கா ஜெண்டில்மேன் னு சொல்வாங்க. இவர் வண்டவாளம் எல்லாம் எனக்குத்தானே தெரியும்? வர வர ரொம்ப ரொம்ப மோசம் இவர்" என்று எண்ணி வெட்கப்பட்டாள். அங்கே பாத்ரூம் ஓரத்தில் இவ்வளவுக்கும் காரணமான, தன் கனவை நனவாக்கிய அந்த பழைய புடவையைப் பார்த்து தனக்குள் சிரித்தாள்.

குளித்துவிட்டு வெளியே வந்தவள், அப்போது பாத்ரூமில் நுழைந்த ஹரியிடம் , "ப்ராஜெக்ட் டெட் லைன், நாளைக்குனு சொன்னீங்க! ரெண்டு மணி நேரம் வேஸ்டாயிடுச்சே? பாவம் நீங்க!" என்றாள் கிண்டலாக.

"நீதான் சதி பண்ணிட்டடி! ஏன் எனக்கு ப்ரமோஷன் கெடைக்கிறது பிடிக்கலையா? உன்னைவிட ரொம்ப அதிக சாலரி வாங்கிடுவேன்னு இப்படி செக்ஸியா சேலையைக் கட்டி வந்து கவுத்தீட்டயேடி" என்று அவள் பின்புறம் தட்டிவிட்டு அவள் கன்னத்தில் லேசா முத்தமிட்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு "அரைகுறை" காயத்ரியைவிட, உடம்பெல்லாம் மறைத்து சேலையில் இருக்கும் "பத்தினி" காயத்ரிதான் கவர்ச்சியாக இருக்கிறாள் என்பது இப்போதாவது தெளிவாகப் புரிந்ததே. "நல்ல வேளை வாஷிங் மெஷின் "ரிப்பேர்" ஆச்சு" னு தனக்குள் சொல்லி சிரித்துக்கொண்டாள். ஒருவழியாக அவள் பகல்கனவு நனவானது. 
 *********************

இது ஒரு மீள்பதிவே!

காயத்ரியின் பகல்கனவு! (18 + ONLY)

9 comments:

Avargal Unmaigal said...

வருண் நீங்க எங்க வீட்டுல கேமரா ஏதும் வைத்து வேவு பார்த்து பதிவு எழுதவில்லையே.....

மேலை நாட்டில் நடக்கும் உண்மையை அப்பட்டாமாக எழுதி இருக்கீங்க.....பாராட்டுக்கள்


நிச்சயம் இந்த பதிவை நிறைய பேர் வந்து படிச்சு இருப்பாங்க... ஆனா அவங்க ரொம்ப ஒழுக்கமான ஆளாக மனதில் நினைத்து கருத்து போடாம சென்று இருப்பார்கள்

Avargal Unmaigal said...

வருண் நீங்கள் தப்பாக எடுத்து கொள்ளவில்லை என்றால் ஒன்று சொல்லவிரும்புகிறேன்.. உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது. அந்த திறமையை ஆத்திகம் நாத்திகம் என்பது பற்றி விவாவதித்து நேரம் போக்காமல் சிறந்த படைப்புகளை தாருங்கள் என்பதுதான் நான் சொல்ல வருவது. முதலில் கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும்.

ஆத்திகம் நாத்திகம் பற்றி பேசுவதால் ஆத்திககாரர்கள் நாத்திகத்திற்கும் நாத்திககாரர்கள் ஆத்திகத்திற்கும் மாறுவதில்லை. நிறைய நல்ல படைப்புகளை தாருங்கள் முன்பே நான் உங்கள் சில பதிவுகளை படித்து பாராட்டி இருக்கிறேன். வருணா இப்படி அருமையாக எழுதி இருக்கிறார் என்ரு வியந்தும் இருக்கிறேன்..உங்களின் அருமையான படைப்புகளை எதிர் நோக்குகிறேன்

என் மனதில் தோன்றியதை சொல்லனும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன். ஒரு வேளை நான் அதிகப்பிரசங்கியாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

வருண் said...

மதுரைத் தமிழரே:

உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

1) நான் பொதுவாக மற்றவர் தளத்திற்கு போய் பின்னூட்டம் சரியாக இடுவதில்லை. ஒண்ணு ரெண்டு எங்கேயாவது இடுவது அவ்ளோதான்.

கொடுத்தால்த் தானே கெடைக்கும்? அதனால யாரையும் நான் குறை சொல்லுவதில்லை. அபப்டி குறை சொல்ல தகுதி எனக்கு இல்லைனு நம்புறேன். :)

2) கிரி, ஒரு முறை இன்னொரு கதைக்கு பின்னூட்டமிடும்போதுதான் தெரிந்தது. நான் "ரொமாண்ஸ்"னு எழுத ஆரம்பித்துவிட்டால் கொஞ்சம் வரம்பு மீறி (செக்ஸ் அதிகமாகக் கலந்து) எழுதி விடுகிறேன் என்று!. அதனால் ஒரு சில "நல்ல வாசகர்கள்" படிச்சுட்டு திட்டாமல் மனசுக்குள்ளேயே திட்டிட்டுப் போயிடுறாங்கனு நெனைக்கிறேன்.

இந்தமாதிரிக் கதையை ரொம்ப நல்லாயிருக்குனு சொன்னாலே பிரச்சினைதான். இல்லையா? :) நல்லாயில்லைனு சொன்னாலும் பிரச்சினைதான். அவங்க என்ன செய்வாங்க பாவம்? :)))

அதனால நம்மிடம் குறைகளை வைத்துக்கொண்டு வாசகர்களை குறை சொல்லுவது ரொம்ப ரொம்ப தப்புனு நெனைக்கிறேன். :)

There are some more issues which I dont want to talk about now! :)))

வருண் said...

***Avargal Unmaigal said...

வருண் நீங்கள் தப்பாக எடுத்து கொள்ளவில்லை என்றால் ஒன்று சொல்லவிரும்புகிறேன்.. உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது. அந்த திறமையை ஆத்திகம் நாத்திகம் என்பது பற்றி விவாவதித்து நேரம் போக்காமல் சிறந்த படைப்புகளை தாருங்கள் என்பதுதான் நான் சொல்ல வருவது. முதலில் கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும்.

ஆத்திகம் நாத்திகம் பற்றி பேசுவதால் ஆத்திககாரர்கள் நாத்திகத்திற்கும் நாத்திககாரர்கள் ஆத்திகத்திற்கும் மாறுவதில்லை. நிறைய நல்ல படைப்புகளை தாருங்கள் முன்பே நான் உங்கள் சில பதிவுகளை படித்து பாராட்டி இருக்கிறேன். வருணா இப்படி அருமையாக எழுதி இருக்கிறார் என்ரு வியந்தும் இருக்கிறேன்..உங்களின் அருமையான படைப்புகளை எதிர் நோக்குகிறேன்

என் மனதில் தோன்றியதை சொல்லனும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன். ஒரு வேளை நான் அதிகப்பிரசங்கியாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்***

பார்க்கலாம், மதுரைத் தமிழன். :)))

காமக்கிழத்தன் said...

நல்ல ‘உளவியல்’கதை.

கதையின் ’உள்ளடக்கம்’ நடைமுறை சாத்தியமானதுதான்.

பெண்ணின் உள்மன உணர்ச்சிகளை வடித்தெடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

தங்குதடையின்றி, எளிய, எதார்த்த நடையில் கதை சொல்லியிருக்கிறீர்கள்.

தொய்வில்லாமல் எழுதுங்கள்; நிறையவே சாதிப்பீர்கள்.

பாராட்டுகள் வருண்.





சேக்காளி said...

முந்தானை பூ வாசமே தனிதான்.

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

கறுத்தான் said...

ஒரு மனிதனுடைய எண்ணபோக்கின் மீது அவன் சார்ந்துள்ள இனத்தின் பண்பாடு கலாச்சாராம் என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய தூணடுகிறது உங்கள் கதை

Unknown said...

veryyy superrrrrrrrrrrr