Thursday, May 8, 2014

கவிஞரே! ஏன் இந்த வீண் வம்பு?

சொல்லவந்த ஒரு விசயத்தை
தெளிவாக சொல்வதை தவிர்த்து
கவிதை வடிவாக்க வேண்டுமென்று
மடக்கி மடக்கி எழுதி
பத்தி பத்தியாக எழுதி
அர்த்தமற்ற கற்பனைகளை
வலுக்கட்டாயமாகக் கலந்து
தேவையேயில்லா வர்ணனைகளை
 அங்கங்கே அதில் பூசி மொழுகி
பிறரையும் குழப்பி தானும்
குழம்புவதுதான் கவிதையா? 
 
******
 
 ஆக்கம்: கவி எழுதவே முடியாத கவிஞர் வருண் :-)
 
Disclaimer: Please don't misunderstand me! This is not meant to criticize growing young Tamil poets. வருண், தன்னால கவிதை எழுத முடியவில்லையே என்கிற இயலாமையை இப்படி வெளிக்காட்டுகிறான் னு நெனச்சுப் படிங்க!  :)

No comments: