Thursday, July 7, 2016

அளவாகக் குடித்த அபலைப்பெண் ஐஸ்வர்யா!

முந்தியெல்லாம், இந்தப் பாழாப்போன லாரிக்காரன் குடிச்சுப்புட்டு அடிச்சுக் கொன்னு போட்டுட்டான் பாவினுதான் செய்தி வரும். இப்போ என்னடானா ஐஸ்வர்யானு ஒரு தாய்க்குலம் குடிச்சுட்டு.. இல்லை இல்லை அளவாக கவனமாக அனுமதிக்கப் பட்ட அளவு குடித்துவிட்டு தன் வண்டியை வைத்து ஏற்றி ஒரு உயிரையும் சேர்த்து குடித்துவிட்டாராம்.  இந்தியா சூப்பர் பவர் ஆவதுக்கு அறிகுறிகள் தெரியுதா?!

இவன் என்னடா வருண், பக்கா லோக் கிளாஸ் மாதிரி இருக்கான். ஆனால் அப்பப்போ ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் குடிப்பதும் தப்புத்தான், அதை ஊக்குவிப்பதுபோல் பதிவெழுதுவது அதைவிட தப்புனு பேசிக்கிட்டு அலைகிறான்னு பலர் யோசித்துக்கொண்டு இருக்கும்போது நம்ம அபலைப் பெண் ஐஸ்வர்யா இப்படி செய்துபுட்டாளே!

ஒரு பக்கத்தில் சுவாதி என்கிற பெண்ணை பொது இடத்தில் கழுத்தை அறுத்து கொல்லுறானுக இந்த ஆண் மிருகங்கள். இன்னொரு பக்கம் அப்பாவிப் பெண் இந்தம்மா குடிச்சுட்டு ஒருத்தனை ஏத்தி கொன்னுபுடுச்சு. ஆமாம், நாங்க ஆம்பளைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லைனு நிரூபிச்சுடுச்சு!. சரி விடுங்க! ஆணும் பெண்ணும் சரி சமம் சமானம்தான்!

அச்சச்சோ இந்தப் பொறுக்கி வருண், கேவ்லம்  ஒரு ஆம்பளை! ஒரு அபலைப் பெண்ணால் ஏற்பட்ட ஒரு சாதாரண  உயிர்ப் பலியை எப்படி விமர்சிக்கலாம்?! னு நம்ம போலிப் பெண்ணியவாதிகள் மற்றும் புதுமைப் பெண்கள் எல்லாம் பொங்கி எழுந்து என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவாங்களேனு எனக்கு பயம்மா இருக்கு?!

3 comments:

ப.கந்தசாமி said...

பெண்களைக் கேவலமாகப் பேசுபவர்களை சுண்ணாம்புக் காளவாயில் போடுவதற்கு சட்டம் வரப்போகுது!

G.M Balasubramaniam said...

உங்கள் துலாக்கோல் சமனாகத்தான் இருக்கிறது

Yarlpavanan said...

தங்கள் சிறந்த பதிவுக்கு எனது பாராட்டுகள்